தோண்ட தோண்ட கிடைக்கும் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள்! எம்பிஏ பட்டதாரிகள் செய்ய கூடிய வேலையா இது?
அண்மையில் சிக்கிய பட்டதாரி கார் கொள்ளையர்களிடத்தில் இருந்த மேலும் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் கை பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக் காலங்களாக வாகன திருட்டு சம்பவங்கள் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தற்போதைய வாகன கொள்ளையர்கள் பெரும்பாலானோர் அதிக தொழில்நுட்பங்களைக் கையாள்வதால் அவர்களைப் பிடிப்பதில் அதிகம் சிக்கல் நிலவுகின்றது.

என்னதான், காவல்துறை தரப்பில் உயர் ரக தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், எப்படியோ காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு வாகனங்களைக் கொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர்.
அந்தவகையில்தான், நாட்டின் அநேக இடங்களில் வாகனங்களைக் கொள்ளையடித்து வந்த குழுவினர் சமீபத்தில் லக்னோ காவலர்களிடம் சிக்கினர்.

இவர்களிடத்தில் இருந்து ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 60க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த வாகனங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள் யார் என்பதுதான் காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது வரை கார் திருட்டு சம்பவத்தில் ஆறு பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில், பெரும்பாலானோர் எம்பிஏ பட்டாதாரிகளாக இருக்கின்றனர். இதை அறிந்த காவல்துறையே ஒரு நிமிடம் ஒரு உறைந்திருக்கின்றது.
பலர் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வெவ்வேறு பாதைகளைத் தேர்வு செய்து வருகின்ற வேலையில் இந்த எம்பிஏ பட்டதாரிகள் வாகன திருட்டைத் தேர்வு செய்திருப்பது காவலர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கடந்த காலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலையுயர்ந்த கார்களை திருடி விற்பனைச் செய்திருப்பதாக திடுக்கிடும் தகவலைப் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
தற்போது மட்டுமே இவர்களிடத்தில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த குழுவினர் காரை திருட பிரத்யேக, இதுவரை யாருமே கையாளாத சில யுக்திகளைக் கையாண்டிருக்கின்றனர்.

அதாவது, விபத்து மற்றும் பேரழிவுகளில் சிக்கி பயனற்றதாக மாறிய வாகனங்களை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் தேடிக் கண்டுபிடிக்க இந்த கும்பல், அதன் உரிமையாளரிடத்திலேயே சென்று அந்த கார்குறித்த ஆவணங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும். பின்னர். அந்த ஆவணத்திற்கு ஏற்ப நிறம், மாடல் என அனைத்திலும் ஒத்துப்போகக் கூடிய பயன்பாட்டில் இருக்கும் வாகனத்தை அந்த கழு தேடிக் கண்டுபிடிக்கும்.

இதன் பின்னரே அவர்களின் சூழ்ச்சமத்தை அங்கு காட்டுகின்றனர். ஆம், தேடிக் கண்டுபிடித்த வாகனத்தை ஏதோ ஓர் வழியில் கையகப்படுத்தி, தாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் அழிந்து வாகனத்தின் ஆவணத்திற்கு ஏற்ப மாறுதல்கள் கொடுப்பர். பின்னர், அதே காரை சொந்த உரிமையாளர் வந்தால்கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் மாற்றி செகண்ட் ஹேண்ட சந்தையில் விற்று காசு பார்ப்பார்.

இவ்வாறுதான் அவர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளை களவு செயலால் சூறையாடிக் கொண்டிருந்தனர். தற்போது போலீஸாரிடமும் சிக்கியிருக்கின்றன். இவர்கள் மிகவும் தனித்துவமான யுக்தியைக் காயண்டதனாலயே காவல்துறையின் கண்களில் இருந்து இத்தனைக் காலம் தப்பித்து வந்திருந்தனர். தற்போது ஒரு வழியாக பிடிப்பட்டிருக்கின்றனர்.

எனவே, இவர்களிடத்தில் இருந்து வாகனங்களை மீட்டும் பணியில் லக்னோ காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த இழிவான செயலில் எம்பிஏ பட்டதாரிகளுக்கு மட்டுமின்றி சில காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பங்கிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த கும்பல் மிக முக்கியமாக விலையுயர்ந்த கார்களையே அதிகம் திருடி வந்துள்ளது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா போன்ற சொகுசு கார்களையே முக்கிய குறிக்கோளாக வைத்து திருடி வந்திருக்கின்றனர். இத்துடன், சில பட்ஜெட் கார்களும் அவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








