Just In
- 58 min ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 2 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 8 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 8 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் புதிய ஸ்கோடா செடான் கார்!
ரேபிட் காருக்கு மாற்றாக, புதிய செடான் கார் மாடலை இந்தியாவுக்காக பிரத்யேகமாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த காரின் அறிமுக விபரமும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஸ்கோடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புனே நகரில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய கார்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ரேபிட் காருக்கு மாற்றாக வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரேபிட் கார் மாடலை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ரேபிட் காருக்கு மாற்றாக இந்தியாவில் புத்தம் புதிய செடான் கார் மாடலை அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ஸாக் ஹொல்லிஸ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட MQB AO என்ற விசேஷ கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய செடான் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் ரேபிட் கார் மாடலைவிட இந்த புதிய செடான் கார் பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செடான் காரில் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, டீசல் மாடல் இருக்காது, டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்படும் ரேபிட் செடான் கார் மாடலானது புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?