Just In
- 47 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் புதிய ஸ்கோடா செடான் கார்!
ரேபிட் காருக்கு மாற்றாக, புதிய செடான் கார் மாடலை இந்தியாவுக்காக பிரத்யேகமாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த காரின் அறிமுக விபரமும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஸ்கோடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புனே நகரில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய கார்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ரேபிட் காருக்கு மாற்றாக வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரேபிட் கார் மாடலை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ரேபிட் காருக்கு மாற்றாக இந்தியாவில் புத்தம் புதிய செடான் கார் மாடலை அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ஸாக் ஹொல்லிஸ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட MQB AO என்ற விசேஷ கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய செடான் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் ரேபிட் கார் மாடலைவிட இந்த புதிய செடான் கார் பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செடான் காரில் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, டீசல் மாடல் இருக்காது, டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்படும் ரேபிட் செடான் கார் மாடலானது புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.