மத்த ஆம்புலன்ஸ் மாதிரி இல்ல! இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு! தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
புனே நகராட்சிக்கு டாடா நிறுவனம், அதன் விங்கர் அடிப்படையிலான 51 புதிய ஆம்புலன்ஸ்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா, எதற்கும் அஞ்சாத மனிதர்களைக் கூட நடு நடுங்க வைத்து வரும் ஒற்றை வார்த்தை (வைரஸ்)-ஆக இது இருக்கின்றது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தின் இறுதியில் ஏற்பட ஆரம்பித்த இந்த வைரசின் தாக்கம் தற்போது வரை வீரியம் குறையாமல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வைரசின் பாதிப்பால் பல எண்ணற்ற மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும், பலர் பாதிப்பிற்கு ஆளாகியும் வருகின்றனர். அண்மையில் பாடும் நிலாவான திரை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இந்த வைரஸ் பாதிப்பால் உயிர்நீத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு, எண்ணற்ற உயிர்களை இந்த வைரஸ் தனக்கு இரையாக்கிக் கொண்டு வருகின்றது. வைரசைத் தடுக்கும் விதமாக ஒவ்வொரு மாநில அரசும் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இந்தவேலையிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால் நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில் குறிப்பிட்ட நகரத்தின் மருத்துவ பயன்பாட்டிற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயிர் காக்கும் உண்ணத கருவிகளில் ஒன்றான ஆம்புலன்ஸ்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனம், கொரோனா பரவல் ஆரம்பித்த நாளிலிருந்தே பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

முன்னதாக, நாட்டின் எந்தவொரு தனியார் நிறுவனமும் இதுவரை வழங்காத வகையிலான ஓர் நிதி உதவியை அறிவித்தது. ஆம், இந்த நிறுவனம் தாமாக முன் வந்து பல ஆயிரம் கோடிகளை பேரிடர் மீட்பிற்காக வழங்குவதாக அறிவித்தது. இதுமட்டுமின்றி, கிரமாப்புறங்களுக்கு தேவையான மருத்து உதவிகளையும் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அவசர ஊர்தி ஆம்புலன்ஸை வழங்கியது. இவ்வாறு, கடந்த காலங்களில் டாடா குழுமம் செய்த உதவிகள் ஏராளமானவை ஆகும். இந்த நிலையில், தற்போது மஹராஷ்டிரா மாநிலத்தின், புனே மாவட்ட சபைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 51 ஆம்புலன்ஸ்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, டாடா விங்கர் அடிப்படையிலான ஆம்புலன்ஸ் ஆகும். இந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்திலும் உயிர் காப்பதற்கான அனைத்து கருவிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத் தகுந்தது. குறிப்பாக, கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு மருத்துவம் அளிப்பதில் முக்கிய கருவியாக இருக்கும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற முதன்மைக் கருவிகள் இதில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆம்புலன்ஸ்களை மஹாராஷ்டிரா அரசு வழங்கிய ஆர்டரின் பேரிலேயே டாடா வழங்கியிருக்கின்றது. அண்மையில் இ-மார்க்கெட்பிளேஸ் வாயிலாக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் கொள்முதலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை ஆன்-லைனிலேயே டாடா மோட்டார்ஸ் வென்றது. இதன் பின்னரே அந்நிறுவனத்திற்கு ஆம்புலன்ஸ் கொள்முதலுக்கான ஆர்டரை புனே நகராட்சி நிர்வாகம் வழங்கியது.

இதன் பேரிலேயே தற்போது 51 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் பிஎஸ் VI தரத்திலானவை ஆகும். இந்த ஆம்புலன்ஸ் பிற ஆம்புலன்ஸைப் போன்று இல்லாமல் டிரைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஓட்டுநருக்கு தனியறை அமைப்பு இந்த ஆம்புலன்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால், கொரோனா தொற்றுடையவர்களை மிக பத்திரமாக இந்த ஆம்புலன்ஸ் உதவியால் கையாள முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெரும் தொற்று ஏற்பட்டாலும், இந்த ஆம்புலன்ஸை வைத்து எளிதில் சமாளிக்கம் முடியும்.

இதுமட்டுமின்றி எரிபொருளை மிச்சப்படுத்தும் திறனும் இந்த ஆம்புலன்சுக்கு டாடா வழங்கியிருக்கின்றது. இதில், வழங்கப்படட்டிருக்கும் 'ஈகோ' எனும் மோடினைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸை இயக்கும்போது இது குறைந்த எரிபொருளையே உறிஞ்சும். எனவே, கணிசமாக மைலேஜை நம்மால் உயர்த்திப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications