Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்... விபரம் உள்ளே!
டாடா அல்ட்ராஸ் காரின் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலின் உற்பத்தி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் மிக வலுவான சந்தையை தக்க வைத்து வருகின்றன. ஹோண்டா ஜாஸ் கார் குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த சந்தையில் பங்களிப்பை பெற்றிருக்கிறது. மேலும், மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலாக வந்த டொயோட்டா க்ளான்ஸா காரும் ஹோண்டா ஜாஸ் காரின் மார்க்கெட்டை குறைத்துவிட்டது.
இந்த நிலையில், பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் அதிக சிறப்பம்சங்களுடன் புத்தம் புதிய அல்ட்ராஸ் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் கொண்டு வந்தது. வந்தது முதல் சீரான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், போட்டியாளர்கள் மிக வலுவான நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வையும், மதிப்பையும் அல்ட்ராஸ் காரில் வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அல்ட்ராஸ் காரில் வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. தற்போது அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலமாக, ஊரடங்கு முடிந்தவுடன் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி பலேனோ காரில் வழங்கப்பட்டு வந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு பிஎஸ்6 விதிகளால் நீக்கப்பட்டுவிட்டது. அதேோன்று, ஆர்எஸ் என்ற சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ எஞ்சின் தேர்வும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டை குறிவைத்து டாடா அல்ட்ராஸ் காரின் டீசல் மாடலும், விரைவில் வரும் டர்போ பெட்ரோல் மாடலும் நிலைநிறுத்தப்படும். இனி பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டீசல் எஞ்சின் தேர்வையும், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வை எதிர்பார்ப்பவர்கள் மாருதி பலேனோ காரை தவிர்த்து டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட பிற மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. எனவே, டாடா மோட்டார்ஸ் நம்பிக்கையுடன் டர்போ பெட்ரோல் மாடலை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?