Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சீனாவிற்கு எதிராக துணிச்சலுடன் டாடா எடுத்த முடிவு! யாருமே இத எதிர்பார்க்கல! செம்ம கெத்து சார் நீங்க!
சீனாவிற்கு எதிராக செயல்படும் வகையில் டாடா நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ஆகிய இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கைகளப்பு ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இதேபோன்று சீனா வீரர்களும் கணிசமாக இறந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏஎன்ஐ செய்தி தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஆனால், அதுகுறித்த சீனா தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீனா வீரர்கள் திட்டமிட்டே இந்திய வீரர்களிடம் மோதலில் ஈடுபட்டதாகவும், மேலும், அவர்களைத் தாக்குவதற்காக கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் சமூக வலைத் தளங்களில் தகவல்கள் வைரலாகின.
இதேபோன்று பல்வேறு தகவல்கள் சீனாவிற்கு எதிராக தற்போது வரை சமூக ஊடங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்தியர்கள் மத்தியில் சீனாவின் மீது அதிக வெறுப்புணர்ச்சியே ஏற்பட்டுள்ளது. இந்த வெறுப்புணர்வை எதிர்ப்பாக காட்டும் விதமாக இந்தியர்கள் பலர் 'பாய்காட் சீனா' என்ற கோஷத்தை முழங்க ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன்படி, ஒரு சிலர் தங்களின் வீடுகளில் இருக்கும் சீன தயாரிப்புகளை தூக்கியெறிந்து, அதுகுறித்த வீடியோவை பதிவிட்டனர். இவ்வாறு பலர் சீனாவிற்கும், அந்த நாட்டைச் சார்ந்து விற்பனையாகும் பொருட்களுக்கும் எதிராக அறிவிக்கப்படாத தடையைக் கொண்டு வந்தனர்.
இந்த நிலை நாளுக்கு நாள் இந்தியர்கள் தீவிரமடைந்த வண்ணமே இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில இந்திய நிறுவனங்கள், சீன உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கொள்முதல் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றன. அதேபோன்று, இரு நாட்டு நிறுவன இணைவிற்கும் முடிவுகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இம்மாதிரியான ஓர் முயற்சியில்தான் நாட்டின் ஜாம்பவானான டாடா தற்போது களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செரி நிறுவனத்துடன் இணைந்து அந்நாட்டின் பயணிகள் வாகன பிரிவில் இணைய திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போதைய எல்லைப் பிரச்னை இரு நாட்டு நிறுவனங்களின் இணைவிற்கும் முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது, டாடா நிறுவனம், சீன நிறுவனம் செரியுடன் மேற்கொண்ட வந்த பேச்சுவார்த்தை தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்டுள்ள தகவலின்படி, டாடா மோட்டார்ஸ், ஐரோப்பா, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், தற்போதைய எல்லை பிரச்னைக் காரணமாக செரி மற்றும் கீலி ஆகிய சீன நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் இணைவின் மூலம் அந்தந்த நாட்டில் கால் தடம் பதிப்பது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் களமிறக்குவதும் டாடாவின் திட்டமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதே செரி நிறுவனத்துடன் இணைந்துதான் டாடா நிறுவனம் அதன் சொகுசு வாகனங்களான லேண்ட் ரோவர் ஜாகுவார் வாகனங்களை சீன சந்தையில் களமிறக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நிறுவனத்தின் விற்பனை அண்மைக் காலங்களாக (கொரோனா ஆரம்பித்த நாள் முதல்) குறைந்துக் கொண்டே வருகின்றது. இதனைச் சமாளிக்கவே கூட்டணிக்கான அழைப்பை இந்நிறுவனம் விடுத்தது.
இதனடிப்படையில் டாடா- சீன நிறுவனம் செரி ஆகியவற்றின் இணைவு எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இதன்மூலம் டாடாவின் 49 சதவீத பங்குகளை அது வாங்கலாம் என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செரி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மின்சார வாகனங்களும் இந்தியாவில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இவையனைத்திற்கும் முற்றிப் புள்ளி வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!