Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சிறப்பு விருதை டாடா நெக்ஸான் கார் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
டாடா நிறுவனத்தின் சிறப்பு மிக்க கார் மாடல்களில் டாடா நெக்ஸா எஸ்யூவியும் ஒன்று. இக்கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதற்கு, இக்கார் அதீத பாதுகாப்பு திறன் கொண்டது என்பதே அர்த்தம் ஆகும்.
ஆகையால், இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த நிலையில் இக்கார் மேலும் சிறப்பு வாய்ந்தது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் டாடா நெக்ஸான் அதிக பாதுகாப்பானது மட்டுமல்ல கவர்ச்சியான காரும் கூட என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சிஐஐ - இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, டாடா நெக்ஸான் கவர்ச்சியான வடிவமைப்பைக் கொண்ட கார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இது ஓர் லாப நோக்கற்ற அமைப்புடை கார் என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது. ஆகையால், இந்தியாவின் நான்கு சக்கர வாகன (பயணிகள் வாகனம்) பிரிவில் இக்காரே சிறப்பு வடிவமைப்பைப் பெற்ற கார் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.
இதுகுறித்த தகவலை டாடா மோட்டார்ஸின் குளோபல் டிசைன் பிரிவின் துணை தலைவர் பிரதாப் போஷ், சமூக வலைதளத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். டாடா நெக்ஸான் காரின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "விருதுகளை வெல்வது எப்போதும் இனிமையானது. இதயங்களை வெல்வது இன்னும் இனிமையானது. எங்கள் அணிக்கும் இது இனிமையான ஆண்டு முடிவு" என கூறியிருந்தார்.
டாடா நிறுவனம், நெக்ஸான் காரை இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு மொழியிலேயே உருவாக்கி வருகின்றது. இதே வடிவமைப்பைப் பயன்படுத்தியே ஹாரியர், அல்ட்ராஸ் உள்ளிட்ட பிற புதுமுக கார்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், இவற்றின் முகப்பு பகுதி ஒரே மாதிரியான காட்சியளிக்கும். இருப்பினும், நெக்ஸான் கார் சிஐஐ அமைப்பின் விருதைத் தட்டிச் சென்றிருக்கின்றது.
டாடா நெக்ஸான், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவி ரக காராகும். இக்காரில் பாதுகாப்பு வசதிகளாக ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், முன் பக்க இருக்கையாளர்களுக்கென இரு ஏர்பேக்குகள், ரோல்-ஓவர் மிடிகேஷன், பலுவை எச்சரிக்கும் சீட் பெல்ட்கள், பிரேக் டிஸ்க் தூய்மைப்படுத்தும் வசதி, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், சீட் பெல்ட் அலாரம், அதிவேக எச்சரிக்கை என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி பிரீமியம் வசதிகளாக இக்காரில் எலெக்ட்ரானிக் பொத்தான் மூலம் கன்ட்ரோல் செய்யக்கூடிய சன் ரூஃப், ட்யூவல் டோன் நிறம், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இக்கார் இந்தியாவில் ரூ. 6.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே