Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரூ. 2.24 லட்சம் வரை விலை குறைப்பு! பிரபல நிறுவனத்தின் முடிவால் வாயடைத்த மக்கள்! இது கொரோனா ட்ரீட்!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமொன்று விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக புத்தும் புதிய மாடலின் விலையில் ரூ. 2.24 லட்சம் வரை விலையைக் குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து கார்களை தயாரித்து வருகின்றது. அந்தவகையில், தற்போது டெஸ்லா நிறுவனம், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் எஸ் ஆகிய மின்சார கார்களை உலகின் முக்கிய நாடுகள் சிலவற்றில் விற்பனைச் செய்து வருகின்றது.
இத்துடன், புதிய மாடல்களையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், இந்நிறுவனத்தின் சைபர் ட்ரக் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிற்கும் ஓர் மாடல் ஆகும். உலகின் அதிக ரேஞ்ஜ் வழங்கும் மின்சார டிரக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான மாடல் ஒய்-க்கு மட்டும் ஏனோ கஷ்ட காலம் ஆரம்பித்துள்ளது. அதிலும், கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து அது அதி தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்த புதிய மாடலை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே, தற்போது டெஸ்லா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் மின்சார வாகனங்களில் மாடல் ஒய்-யும் ஒன்றே.
இந்த மாடலின் விற்பனைதான் கொரோனா இக்கட்டான சூழ்நிலை ஆரம்பித்த நாளில் இருந்து சரிவைச் சந்தித்து வருகின்றது. ஆகையால், டெஸ்லா நிறுவனம் இதன் விலையைக் குறைக்க திட்டமிட்டது. இதன்படி, அமெரிக்க மதிப்பில் 3,000 டாலர்கள் வரை குறைக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2.24 லட்சம் ஆகும். இது தோராயமாகக் கூறப்பட்ட மதிப்பாகும். இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என டெஸ்லா நம்புகின்றது.
இந்த கார் முன்னதாக 52,990 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் இதன் விலையில் மூவாயிரம் டாலர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை தற்போது 49,990 டாலர்களாக குறைந்துள்ளது. இது 6 சதவீத விலை குறைப்பாகும்.
வெகு நாட்களாக காத்திருப்பில் இருந்த காரின் (மாடல் ஒய்) டெலிவரி கடந்த மார்ச் மாதம்தான் தொடங்கியது. இது, கொரோனா வைரஸின் பரவல் உச்சத்தில் இருந்த காலம் ஆகும். இந்த காலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தாயரிப்புகளுக்கு மட்டுமின்றி பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கும் விற்பனைக்கு இறங்கு முகமாகவே இருந்ததது.
இந்த நிலையில் டெஸ்லா மாடல் ஒய்-க்கு கூடுதல் டஃப்பை ஏற்படுத்தும் வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏஜி எனும் புதிய மின்சார காரை களமிறக்கியது. இதன் வருகை மாடல் ஒய்-யின் விற்பனையை லேசாக பதம் பார்த்தது. தற்போது வரை இதன் பாதிப்பு நீடித்து வருகின்றது.
எனவேதான், வாடிக்கையாளர்களை விலைக் குறைப்பு மூலம் கவர டெஸ்லா திட்டமிட்டு, அதை செயல்பாட்டிலும் கொண்டு வந்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும் கார்களில் மாடல் ஒய்-யும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுகுறித்த தகவலை டெஸ்லா நிறுவனமே கடந்த காலங்களில் அறிவித்திருந்தது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இந்த காருக்கான புக்கிங் எதிர்பாராத வகையில் மிக அமோகமாக இருந்தது.
புத்தம் புதிய மாடலாக சந்தையில் காட்சியளித்து வரும் மாடல் ஒய், அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 505 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும்.
அதேசமயம், இதனை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 270 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த காரை டெஸ்லா நிறுவனம் கார்கோ ஸ்பேஸ் கொண்ட கார் என குறிப்பிடுகின்றது. இதற்கு அக்காரில் இருக்கும் அதிகபட்ச இட வசதியே காரணம். இந்த காரில் ஏழு பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இதன் மூன்றாவது இருக்கை வரிசையை தேவைக்கேற்ப நிறுவி கொள்ள முடியும்.
மாடல் ஒய்-யின் அதிவேக ஓடு திறனுக்காக இரு மின் மோட்டார்களை டெஸ்லா நிறுவியிருக்கின்றது. இது காரின் அனைத்து வீலுக்கும் டார்க் திறனை வழங்கும். இது, வெறும் 3.7 செகண்டுகளிலேயே காரை மணிக்கு 100 கிமீ என்ற உச்சபட்சமாக வேகத்தை அடைய உதவும்.
இத்தகைய அதி சிறப்பு வாய்ந்த காரின் விலையைதான் டெஸ்லா நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் கொரோனாவிற்கே நன்றி கூற வேண்டும். இதனால் ஏற்பட்ட விற்பனைப் பாதிப்பின் காரணமாக டெஸ்லா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க