Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த 5 விஷயத்தை உணர்ந்தா உடனே வண்டியை சர்வீஸ் விட்டுவிடுங்க... இல்லனா ரொம்ப ரிஸ்காயிடும்...
என்னதான் சரிவர சர்வீஸ் செய்தாலும் வாகனத்தில் அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவை நமது கண்களுக்கு புலன்படாவிட்டாலும் சில சமிக்ஞையை வழங்கும். அவ்வாறு கிடைக்கக்கூடிய ஐந்து சமிக்ஞை பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
மனிதர்களின் வாழ்க்கையில் 'பயணம்' என்பது மிகவும் முக்கியமான ஓர் விஷயமாக மாறியிருக்கின்றது. எனவேதான் பயணத்தை மேற்கொள்ள உதவும் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக வளரத் தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனத்தை பலர் வாங்குவதோடு சரி, அதன் பின்னர் அதை முறையாக பராமரிப்பதே இல்லை. அதனை சரிவர கவனிக்கவும் மறந்துவிடுகின்றனர்.
இதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். குறிப்பாக ஓர் காரை தொடர்ச்சியாக உரிய நேரத்தில் சர்வீஸ் செய்வதன் மூலம், நல்ல ஃபெர்பார்மன்ஸ் திறனை மட்டுமின்றி நல்ல மைலேஜையும் நம்மால் பெற முடியும். அதுமட்டுமின்றி, அக்காரின் ஆயுட் காலத்தையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.
எனவேதான் புதிய கார்களை வாங்கும்போது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் கட்டாயம் அதனை சர்வீஸ் செய்ய வேண்டும் என வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் அட்டவணைக் கெடு வழங்குகின்றன. ஆனால், வேலை பலு காரணமாக பலர் இதனையே சரிவர செய்ய தவறிவிடுகின்றனர்.
வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சர்வீஸ் கெடு மட்டுமல்ல குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 10 ஆயிரம் கிமீட்டர்களுக்கு ஒரு முறையாவது காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது. இதையேதான் வாகனத்துறை வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர்.
அவ்வாறு, அனைத்தையும் சரிவர செய்பவர்கள் எந்த பிரச்னையைச் சந்திக்க மாட்டார்களா என கேட்டால்?, அதற்கான பதில் யாரிடத்திலும் இல்லை. இதுவே நிதர்சனமான உண்மை. எனவேதான் கூடுதல் சில வழிமுறைகளையும் வாகன நிபுணர்கள், கார் உரிமையாளர்களுக்கு அறிவுரையாக வழங்குகின்றனர். அந்தவகையில் கார் எழுப்பும் சிறு அறிகுறிகள் யாவை?, அதை எப்படி கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
எஞ்ஜின் எச்சரிக்கை ஒளி
காரின் எஞ்ஜினைக் கவனிக்க வேண்டும் என எச்சரிக்கையூட்டும் லைட் ( காரில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய மின் விளக்கு) ஒளிருமேயானால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனைக் கவனிக்க தவறினால் எஞ்ஜின் பழுது அல்லது மிகப்பெரிய செலவீணத்தை ஏற்படுத்துமாம். குறிப்பாக, வழக்கத்திற்கு மாறான ஏதேனும் சத்தம் எஞ்ஜின் பகுதியில் இருந்து வெளிப்பட்டாலும் அதனையும் உடனடியாக கவனியுங்கள் என்கிறார்கள் வாகன வல்லுநர்கள்.
பிரேக்கிங் தொடர்பான சிக்கல்கள்
சமரசம் செய்யக்கூடிய விஷயமாக இதை ஒரு பார்க்கக்கூடாது. பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய இடத்தில் பிரேக் வசதியே இருக்கின்றன. எனவேதான், அண்மையில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் எனும் புதிய தொழில்நுட்பங்களை இந்திய அரசு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இது வேக வரம்பை உடனடியாக குறைப்பதுடன் அதிக பாதுகாப்பையும் வழங்கக்கூடியது.
ஆனால், பழைய கார்களில் இந்த அம்சம் இடம்பெறுவதில்லை. எனவே, ஒவ்வொரு முறையும் இயக்கத் தொடங்குவதற்கு பிரேக் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றதா என ஆராயும்படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்போது அதில் லேசான வித்தியாசத்தை உணர்ந்தால்கூட உடனடியாக மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையங்களை அணுக வேண்டும் கூறுகின்றனர்.
காருக்கு அடியில் கசிவு
திடீரென காரை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் ஆயில் போன்ற திரவம் கண்களுக்கு தென்பட்டால் உடனடியாக அது தண்ணீரா அல்லது ஆயிலா என அறிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பயணத்தின்போது நமக்க தெரியமால் பள்ளம், மேடுகளில் சிக்கி வாகனத்தின் அடிப்பக்கம் சேதமுற்றிருக்கலாம். இதனால், எஞ்ஜின் ஆயில் அல்லது கூலண்டு ஆயில் பாதை சேதமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவேதான், காருக்கு அடியில் திரவம் போன்று ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இதைச் செய்ய தவறினால் மிகப்பெரிய செலவீணத்துடன் பல்வேறு சிக்கல்களையும் அது நமக்கு வழங்கும். குறிப்பாக, இம்மாதிரியான நேரத்தில் வாகனத்தை சர்வீஸ் சென்டர் அழைத்துச் செல்லாமல், கார் இருக்கும் இடத்திற்கே மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்வது கூடுதல் சிறப்பானது ஆகும்.
மின்சக்தி இழப்பு
வீடுகளில் திடீரென மின் விளக்குகள் டிம்மாக எரிவதைப் போன்று பயணத்தின்போது காரின் பவர் குறைந்தால் எஞ்ஜின் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருக்கின்றது என அர்த்தம். ஆம், எஞ்ஜின் கம்பிரஸன் (engine compression) சரிவர இயங்கவில்லை என அர்த்தம். இதுமட்டுமில்லைங்க, திடீர் சக்தி இழப்பிற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
எரிபொருள் வடிகட்ட அடைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. இந்த இடர்பாட்டை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் இதுவும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அதிக செலவீணத்தையும் திடீரென ஏற்படுத்திவிடும்.
விநோத சத்தங்கள்
கல கலவென்றோ அல்லது முற்றிலும் விநோதமான ஏதேனும் ஓர் சத்தம் காருக்குள் அல்லது எஞ்ஜின் பகுதியில் இருந்து வந்தால் உடனடியாக கவனித்துவிட வேண்டும். ஆம், அதிகமான பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையில் பயணிப்பதன் காரணத்தால் முக்கிய கூறுகள்கூட ஆட்டம் கண்டுவிடுகின்றன. இதனாலயே விநோதமான சத்தம் வாகனத்தில் இருந்து வெளிப்படும்.
அம்மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக கார் மெக்கானிக்கை அணுகி குறிப்பிட்ட அந்த சத்தத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த பாகம் தனியாக கழண்டுவிழுந்து மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம். முதலில் அந்த சத்தம் என்பதைக் கண்டறிந்து உங்களால் சரி செய்ய முடிகின்றதா என ஆராய வேண்டும். அது முடியவில்லை என்றால் நிச்சயம் மெக்கானிக்கை அணுகியே வேண்டும்.
மேற்கூறிய இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களைத் தானாகவே எச்சரிக்கக் கூடியவையாகும். எனவே, அது தரும் எச்சரிக்கையை ஏனோதானோ என விட்டுவிட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும். எங்களுடையது மட்டுமல்ல பலரின் வேண்டுகோளாக இது இருக்கின்றது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!