Just In
- 41 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!
கொரோனா தடுப்பு பணிகளுக்கான முயற்சிகளில் டொயோட்டா கார் நிறுவனமும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
இந்த நிலையில், கொரோனோ தடுப்புப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. இதில், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது, போர் களத்திற்கு செல்லும் வீரனை போல, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது.
இதற்காக, அதிக அளவில் விசேஷமான முக கவசங்கள் மற்றும் உடைகள் தேவைப்படுகின்றன. தேவை மிக அதிகமாக இருக்கும் நிலையில், போர்க்கால அடிப்படையில் இந்த தேவையை நிறைவு செய்வதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்து இருக்கின்றன.
இதனை மனதில் வைத்து மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களும் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான முக கவசங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இணைந்துள்ளது. அந்நிறுவனத்தின் உதிரிபாக சப்ளையரான ஸ்டம்ப் செய்லி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக முக கவசங்களை தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஆரம்ப கட்டமாக நாள் ஒன்றுக்கு 275 முக கவசங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது நாள் ஒன்றுக்கு 5,500 முக கவசங்களை தயாரித்து வருகிறது. இதனை நாள் ஒன்றுக்கு 10,000 யூனிட்டுகள் என்ற அளவில் உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
ஆலைக்கு தொழிலாளர்கள் வருவதற்கான போக்குவரத்து, முக கவசத்தின் டிசைனில் செய்ய வேண்டியிருக்கும் மாறுதல்கள், சப்ளையர்களின் பிரச்னைகளை சரிசெய்து தருவதாகவும், விரைவில் 10,000 இலக்கை எட்டி முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டம்ப் செயுலி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ் மசானி கூறுகையில்," இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் முடிந்த உதவிகளையும், ஒத்துழைப்பையும் அரசுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.
முக கவசங்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் போதிய ஒத்துழைப்பை டொயோட்டா நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால், எங்களது தயாரிப்பு முறை மிக எளிதாகி இருக்கிறது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடைக்கான காசோலையை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் நேரில் வழங்கி இருக்கிறது.
இதுதவிர்த்து, அரசு சார்பில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு பயன்படும் வகையில், 3,000 கொரோனா தடுப்பு கவச உடைகளையும், தினசரி பணியாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி உள்ளது. தனது 14 பஸ்களையும் சுகாதாரப் பணியாளர்கள் போக்குவரத்திற்காக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!