Just In
- 32 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டடது. பின்னர், வர்த்தக செயல்பாடுகள், அவசர தேவைகள் கருதி, பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு பின்னர் நேற்றுமுதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வழிகாட்டு முறைகளுடன் ஓட்டுனர் பயிற்சிகள் செயல்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்றுனர், பணியாளர்கள், பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், 65 வயதை கடந்த முதியவர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரில் பயிற்சி வழங்கும்போது ஏசி போடக்கூடாது என்பதுடன் ஜன்னல்களை திறந்து வைத்து இயக்க வேண்டும். அதேபோன்று, பயிற்சி வழங்குகையில், பயிற்றுனர் மற்றும் அதிகபட்சமாக 2 பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் மட்டுமே காரில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்பத்தை அளவிட உதவும் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். பயிற்றுனர், அலுவலகப் பணியாளர்கள், பயிற்சி பெற வருவோருக்கு கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்வதும் அவசியம்.
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு வருவோரின் பெயர், மொபைல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்டவை தனி பதிவேட்டில் சேகரிக்க வேண்டும் என்றும், அந்த பதிவேடு, அரசின் ஆய்வுப் பணி அதிகாரியிடம் காட்டுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதும் அவசியம். கொரோனா தடுப்பு முறைகள் குறித்த வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகைகளும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பொருத்துவது அவசியம். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் பாடம் நடத்துவது அவசியம்.
ஒரே நேரத்தில் அதிக ஓட்டுனர்களை வைத்து பயிற்சி கொடுக்கக்கூடாது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்கக்கூடாது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...