Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பெங்களூர் டொயோட்டா ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைப்பு... டெலிவிரிப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு!
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரில் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் அனைத்தும் போதிய பலனளிக்காத நிலை தொடர்கிறது. இந்த கொரோனா பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இயல்பு நிலைக்கு வருவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கடுப்படுத்தும் விதமாக இன்று இரவு முதல் வரும் 22ந் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது. இதனால், மக்களுக்கும், தொழில்துறைக்கும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாக்டவுனை மனதில் வைத்து பெங்களூர் அருகே செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டாவது ஷிஃப்ட் முதல் வரும் 22ந் தேதி முதல் ஷிஃப்ட் வரை உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள லாக்டவுன் வழிகாட்டு முறைகளை பின்பற்றும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டொயோட்டா ஆலையில் சில பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் மற்றொரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள், ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான பணியாளர்களுக்கு முழு உதவியும் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுனால் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், புதிய கார் டெலிவிரி பணிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், முன்பதிவு பழைய நிலையில் இல்லை என்பதால், இதனை சமன்படுத்திவிட முடியும் வாய்ப்பு இருப்பதாக கருதி, டொயோட்டா ஆலையை தற்காலிகமாக மூடியுள்ளது.
இதனிடையே, டொயோட்டா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா பரவும் வாய்ப்பை தவிர்க்கும் விதமாக, தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருந்தே தங்களது அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!