கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டொயோட்டா டீலர்கள் திறப்பு!
கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள டீலர்களில் வர்த்தகப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலம் மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளியுள்ளது. எனினும், கொரோனாவை மீறி வர்த்தகப் பணிகளை துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிபந்தனைகளுடன் கார், பைக் நிறுவனங்கள் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காலம் மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளியுள்ளது. எனினும், கொரோனாவை மீறி வர்த்தகப் பணிகளை துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிபந்தனைகளுடன் கார், பைக் நிறுவனங்கள் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைவான மண்டலங்களில் உள்ள 171 டீலர்களிலும் 146 சர்வீஸ் மையங்களிலும் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, 50 சதவீத டீலர்களில் வர்த்தக செயல்பாடுகள் துவங்கப்படுகின்றன.

அத்துடன், அரசு வழிகாட்டுதல்களின்படி, டீலர்களிலும், சர்வீஸ் மையங்களிலும் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி குறிப்பிட்ட சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்க அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், அரசு வழிகாட்டுதல்களின்படி, டீலர்களிலும், சர்வீஸ் மையங்களிலும் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி குறிப்பிட்ட சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்க அனுமதிக்கப்படுவர்.

இதனிடையே, பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆளையில் கடந்த 5ந் தேதி முதல் கார் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், 75 சதவீத உதிரிபாக சப்ளையர்கள் மீண்டும் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

மீதமுள்ள உதிரிபாக சப்ளை நிறுவனங்களும் தங்களது உற்பத்தி மையங்களை விரைவில் திறக்க உள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது. ஆனால், படிப்படியாக உற்பத்திப் பணிகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








