Just In
- 23 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!
டொயோட்டா கிர்லோஸ்லர் மோட்டார் நிறுவனம் அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின்படி தனது தொழிற்சாலை பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகின்றன.
எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் பொருளாதார சீர் செய்யும் பணியிலும் அரசாங்கம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து ஊரடங்கு கடந்த மே 3ஆம் தேதியுடன் முடிவடைவிருந்த நிலையில் மேலும் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மே3ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கில் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சில பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு வணிகங்கள் மீண்டும் பணியை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தற்போது முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் தொழிற்சாலை பணிகளை ஆரம்பித்துள்ளது.
கட்டமுறையில் மீண்டும் பணியை துவங்கியுள்ள டொயோட்டாவின் மொத்த தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒரே நேரத்தில் துவங்குவது என்பது முடியாத காரியமாகும். ஏனெனில் பாகங்களை விற்பனை செய்பவர்களும், டீலர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளனர்.
மேலும் வைரஸின் பரவல் தீவிரமாக சில மாவட்டங்களில் ஊரடங்கு இன்னமும் கடுமையாகவே உள்ளன. இதனால் இந்நிறுவனம் மட்டுமின்றி தொழிற்சாலை பணிகளை துவங்கவுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வழக்கமான பணிகள் அனைத்தும் மொத்தமாக துவங்க சில வாரங்கள் ஆகும்.
இருப்பினும் டொயோட்டா நிறுவனம் தற்போதைக்கு பயிற்சி பணியாளர்களுடன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏனெனில் தற்போதைய சூழலில் ஒவ்வொரு மனிதரின் பாதுகாப்பு விஷயத்திற்கும் முன்னுரிமை தர வேண்டியது கட்டாயமாகும். இதன் காரணமாக தனது தொழிற்சாலையில் உள்ள சுத்திகரிப்பு பொருட்களின் இருப்பை இனி வரும் ஒவ்வொரு நாளிலும் இந்நிறுவனம் கவனிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!