Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதெல்லாம் இல்ல... ரூ.2,000 கோடி முதலீடு பண்ணப் போறோம்... டொயோட்டா திடீர் பல்டி!
இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாக வெளியான தகவல்களை டொயோட்டா கார் நிறுவனம் மறுத்துள்ளது. அத்துடன் புதிதாக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இப்படி எக்கச்சக்கமாக வரி போட்டால், எப்படி பிசினஸ் பண்றது என்று நேற்று டொயோட்டா தலைவர் ஷேகர் விஸ்வநாதன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேட்டி அளித்தபோது, தனது குமுறலை வெளிப்படுத்தினார். மேலும், இந்தியாவில் பின்பற்றப்படும் வாகனங்கள் மீதான வரி விதிப்பு முறை குறித்தும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அத்தோடு, இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த தகவல் அரசியல் ரீதியில் பூகம்பத்தை கிளப்பியது. புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் ரீதியில் இந்த கருத்து அதிர்வை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசுக்கு இது கடும் நெருக்கடியை தரும் வகையில் அமைந்தது. இதனையடுத்து, டொயோட்டா கார் நிறுவனம் அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மிகுந்த ஈடுபாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வலுவான வர்த்தக அடித்தளத்தை இந்தியாவில் உருவாக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில், சிறந்த திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுத்து வருவதாக டொயோட்டா தெரிவித்தது.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாக டொயோட்டா தெரிவித்ததாக வெளியானத் தகவல் தவறானது.
இதுகுறித்து டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் எமக்கு விளக்கம் அளித்துள்ளார். அடுத்த 12 மாதங்களில் ரூ.2,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய டெயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது," என்று தனது ட்விட்டர் செய்தியில் அவர் கூறியுள்ளார்.
இந்த ட்விட்டிற்கு விக்ரம் கிர்லோஸ்கரும் ஆமோதித்து பதில் அளித்துள்ளார். அதில், பிரகாஷ் ஜவடேகர் கூறியது சரிதான். வாகனத் தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். உள்நாடு மற்றும் ஏற்றுமதி என இரண்டிற்கும் இந்த முதலீடு உதவும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
டொயோட்டா துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் விளக்கத்தையடுத்து, இந்தியாவில் முதலீடுகளை நிறுத்தி வைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!