Just In
- 8 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 25 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம்! பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.
திருச்சியைச் சேர்ந்தவர் முத்தப்பன். இவர் அரிசி மில் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சொந்தமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் லாரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஒன்றை மர்ம நபர் ஒருவர், லாரியின் டிரைவர் மதிய உணவிற்காக சென்றிருந்தபோது லாவமாக திருடிச் சென்றார்.
இதைக் கண்டுபிடித்த மில்லின் கணக்காளர் குமார், உரிமையாளர் முத்தப்பாவிற்கு எச்சரிக்கைக் கொடுத்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டவும் செய்தார். இவர் மட்டுமின்றி உரிமையாளர் முத்தப்பா மற்றும் ஒரு சிலர் காரின் மூலமாகவும் லாரி விரட்டினர்.
இதற்கிடையில், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், லாரியை திருடியவர் விடாமல் வாகனத்தை வேகமாக இயக்கிய வண்ணமே இருந்தார். இந்த நிலையில், ரயில்வே கிராஸிங் பகுதியில் லாரி நிற்க நேரிட்டது. அப்போது ஒரு சிலர் லாரியில் ஏறிக் கொண்டனர்.
இருப்பினும், அந்த திருடர் லாரியை விட்டு இறங்காமலே தொடர்ச்சியாக லாரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியிலேயே ஈடுபட்டார். போலீஸார் சிலர் முயன்றும், அவர்களை தள்ளிவிடும் செயலில் அந்த மர்ம நபர் இறங்கினார். இருப்பினும், இரு போலீஸார் மற்றும் லாரிக்குள் இருந்த அரிசி மில் பணியாளர்கள் இணைந்து அவரை கீழே தள்ளி போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தடுக்கப் போலீஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் திருட்டு தினந்தோறும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.
இந்த நிலையிலேயே சினிமாக் காட்சிகளை மிஞ்சுமளவிற்கு லாரி திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுமார் 60 கிமீ விரட்டுதலுக்கு பின்னரே திருடப்பட்ட லாரி மற்றும் திருடனைப் போலீஸார் மடக்கிப்பிடித்திருக்கின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த திருட்டுச் சம்பவம் திருச்சி நகரவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பெரிய வாகனங்களை திருடிக் கொண்டு செல்லும் நபர்களைக் கையாளும்போது சற்று கவனத்துடனேயே கையாள வேண்டும். ரயில் கிராஸிங்கில் நின்ற திருடன் தப்பிப்பதில் இன்னும் வேகத்தையும், தீவிரத்தையும் காட்டியிருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் இந்த சம்பவத்தின்போது அரங்கேறவில்லை.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!