உபர் டாக்சியை மணி வாடகைக்கு புக்கிங் செய்யும் திட்டம் அறிமுகம்!
உபர் டாக்சியை மணி வாடகைக்கு பெறும் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தற்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை இந்த டாக்சி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த நிலையில், மணிக்கணக்கில் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை உபர் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நகரத்திற்குள் பல இடங்களுக்கு செல்லும் தேவை இருப்போருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று உபர் தெரிவித்துள்ளது.

இதனால், ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்து காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என்பதுடன், ஒரே ஓட்டுனர் துணையுடன் பல இடங்களுக்கு விரைவாக சென்று திரும்புவதற்கான வாய்ப்பை கொடுக்கும்.

குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை புக்கிங் செய்து கொள்ளலாம். ஒரு மணிநேரத்திற்கு 10 கிமீ தூரம் வரை செல்வதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு வாடகையாக ரூ.189 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பெங்களூர், ஜெய்பூர், புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், லக்ணோ, கொச்சி, கவுகாத்தி, கான்பூர், போபால், கோயம்புத்தூர், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது வாடிக்கையாளர்கள் மற்றும் தங்களது ஓட்டுனர்களுக்கு சிறப்பான பயன்தரும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் மற்றொரு காரை புக்கிங் செய்து காத்திருக்கும் அவசியத்தை தவிர்ப்பதுடன், ஓட்டுனர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்காக செலவிடும் நேரத்தை தவிர்த்து, கூடுதல் வருவாய் பெற இந்த திட்டம் உதவும் என்று உபர் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வசதியை பெறுவதற்கு உபர் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள உபர் மொபைல் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்கான பல வழிகாட்டு


Click it and Unblock the Notifications








