Just In
- 18 min ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 3 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 4 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 6 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
Don't Miss!
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அக்.1 முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம்: புதிய நடைமுறை அறிமுகமாகிறது
வரும் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மோட்டார் வாகன விதிகளிலும், காலத்திற்கு தக்கவாறு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தொடர்ந்து, அதே பாணியில் பல்வேறு அரசு சார்ந்த பயன்பாட்டு அட்டைகளை ஒரே மாதிரியாக வழங்குவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலமாக, மாநிலங்களுக்கு இடையே பணி, தொழில் சார்ந்து அல்லது குடிபெயர்ந்து செல்வோருக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தவிர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
அந்த வகையில், நவீன மின்னணு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, 1989ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, நாடுமுழுவதும் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவு அட்டை மற்றும் வாகன ஓட்டிகளுக்கான உரிமத்தை வழங்கும் புதிய நடைமுறை வரும் 1ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இனி ஆர்.சி.புக் என்பது மின்னணு அட்டை வடிவில் வழங்கப்படும். அதேபோன்று, ஓட்டுனர் உரிமமும் மின்னணு அட்டை வடிவிற்கு மாறுகிறது. இந்த ஓட்டுனர் உரிம அட்டையில் QR Code மற்றும் Micro Chip ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.
வாகன ஓட்டிகள் செலுத்தி அபாரதம் மற்றும் தண்டனை விபரங்களை எளிதாக இந்த அட்டையை வைத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகனத் துறையினர் கண்டறிந்துவிடலாம். 10 ஆண்டுகள் வரையிலான தண்டனை விபரங்களை இந்த புதிய மின்னணு அட்டையை பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும்.
அதேபோன்று, வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விபரங்கள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட உள்ளது. அதேநேரத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆர்.சி. புத்தகம் அல்லது வாகனப் பதிவு அட்டையை புதுப்பிக்க வேண்டுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தினால் பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. வரும் அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவோருக்கு இந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், டெபிட் கார்டு மூலமாக செலுத்துவோருக்கு பரிவர்த்தனை கட்டணச் சலுகை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!