Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அப்போ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லைன்னு சொல்லுங்க?
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இது வாகன நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனா பிரச்னையால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி மிக அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வாகன நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இதனை மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.
இந்த சூழலில், இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு மிக அதிகமாக இருப்பதால், முதலீடுகளை நிறுத்தி வைக்கப் போவதாக டொயோட்டா கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறியதாக வெளியானச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது அரசியல் ரீதியில் சென்றதால், டொயோட்டா உடனடியாக மறுப்பு அறிக்கையும் வெளியிட்டது. இந்த சூழலில், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற வாகன நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வரி விதிப்பு முறையில் பெரிய உயர்வு இல்லை. மேலும், வாட் வரியை ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி குறைவாகத்தான் உள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை வைப்பதைவிட, வாகன நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செலவீனத்தை குறைத்து, விற்பனையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.
அதேபோன்று, தங்களது தாய் நிறுவனமாக செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இங்குள்ள வாகன நிறுவனங்கள் தரும் ராயல்டி தொகையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏற்கனவே மிக மோசமான நிலையில் இந்த இந்திய வாகன சந்தை, கொரோனா பிரச்னையால் பெரிய அடியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால், விற்பனை அதிகரித்து தங்களது பொருளாதார பாதிப்பை சரிசெய்ய வழிபிறக்கும் என்று வாகன நிறுவனங்கள் காத்திருந்தன. ஆனால், மத்திய அரசு வழங்கி இருக்கும் அறிவுரை வாகன நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.