Just In
- 15 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Movies அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...
போலீஸாரின் சோதனையின்போது இளம்பெண் ஒருவர் கத்தி கதறி அழுதுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆகின்றன. இதனால் அனைத்து மாநிலங்களும் அதன் வாசலை பூட்டிய நிலையிலேயே இருக்கின்றன. இந்த பூட்டுதலில் இருந்து லேசான தளர்வு வழங்கும் விதமாக, மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் இயங்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் சிலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கும் அதிகபட்ச நிபந்தனைகளுடன் தளர்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையிலேயே இருக்கின்றது. மேலும், மக்களும் வழக்கம்போல் நடமாட தடை நீடித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு, வைரஸ் தொற்று முன்பைக் காட்டிலும் தற்போது அதி தீவிரமாக இருப்பதே முக்கிய காரணம் இருக்கின்றது.
எனவே, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் வைத்து, வைரஸ் தொற்றைக் குறைக்கும் விதமாக போலீஸார் அதி-தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், வெளியே வரும் மக்கள் ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து, உரிய காரணத்திற்காகதான் வந்துள்ளனரா என்று பரீட்சையம் செய்த பின்னரே முன்னேறி செல்ல அனுமதிக்கின்றனர்.
இருப்பினம், ஒரு சிலர் போலீஸாரின் கழுகு பார்வையில் மண்ணை தூவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். சிலர் போலீஸிடம் சிக்கிக் கொண்டு, செய்வதறியாமல் தப்பிப்பதற்காக நாடகத்தை அரங்கேற்றிவிடுகின்றனர்.
அந்தவகையிலான ஓர் சம்பவம்தான் உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில், லாக்டவுணை உறுதி செய்யும் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் இயோன் காரை மடக்கி அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால், காரில் வந்த இளம்பெண்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், வெளியே செல்வதற்கான ஆவணத்தைக் கேட்டபோது, அதிக கூச்சலிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், விடாப்பிடியாக போலீஸார் ஆவணத்தைக் கேட்க, நொடிப் பொழுதில் காரை ஓட்டி வந்த இளம்பெண் தப்பிப்பதற்கு வழி இல்லாத காரணத்தால் கதறி கதறி அழ ஆரம்பித்துவிடுகின்றார்.
இளம் பெண்களின் இந்த செயலை பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார். தற்போது அந்த வீடியோதான் இணையத்திலும், ஊடகத்திலும் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் கீழே காணலாம்.
ஆரம்பத்தில் கத்தி கூச்சலிட்ட அப்பெண், போலீஸாரை மிரட்டும் தோனியில் பேசுவதையும் நம்மால் காண முடிகின்றது. இது எடுபடாதநிலையிலேயே அ்வர் அழுகை நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.
அதேசமயம், இந்த சம்பவத்திற்கு முன்பாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை. ஆனால், போலீஸாரிடம் கத்தி கூச்சலிட்ட அப்பெண் (டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்) வாகனத்தின் ஆவணங்களை வெளியே தூக்கி எரிகின்றார்.
இந்த சம்பவத்திற்காக, ஹூண்டாய் இயோன் காரில் வந்த இளம்பெண்களுக்கு ரூ. 3 ஆயிரம் அபராத செல்லாணை உபி போலீஸார் வழங்கியிருக்கின்றனர்.
இதற்கான காரணம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேசிய ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக இத்தகைய அபராதத்தைப் போலீஸார் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலவி வருகின்றது. மேலும், கசப்பானதாக வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் சற்றே தவிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்த சம்பவத்தில் யார்மீது தவறு இருக்கும் என நம்மால் உறுதியாக கூற முடியவில்லை.
நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக வாகனங்களை பறிமுதல் செய்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன. இதைத் தவிர்க்கவே சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்படுகின்றது. இதைப் பெற்றுச் சென்றால் போலீஸாரின் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்..