கொரோனா எதிரொலி... இனி விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்போல் இதுவும் கட்டாயம்... என்ன தெரியுமா?
பொதுவாக விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்தான் முதன்மை தேவையாக இருந்து வருகின்றது. ஆனால், இதைவிட வேறொன்றுதான் முக்கியம் என விமான போக்குவரத்து நிறுவனங்கள் அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்ட உயிர் கொல்லி கொரோனா வைரசின் தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகின்றது. முன்பெல்லாம் இதுபோன்று ஓர் வைரஸ் தொற்று ஏற்பட்டால் வெகு காலம் கழித்தே மற்ற நாடுகளுக்கு பரவும். ஆனால், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வெகுவிரைவில் உலகம் முழவதிலும் பரவி எண்ணற்ற உயிர்களை பறித்து வருகின்றது.

இத்தகைய அதீத பரவலுக்கு விமான போக்குவரத்தும் ஓர் முக்கிய காரணியாக இருக்கின்றது. முந்தைய காலங்களில் எல்லாம் வெளிநாடு பயணம் என்பது அரிதினும் அரிதாக காணப்பட்டது. ஆனால், இப்போது இந்நிலை அப்படியே மாறிவிட்டது. விமான பயணம் மற்றும் வெளிநாடு பயணம் என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.

இதன் பின் விளைவாகவே உயிர் கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிற்கு பரவியிருக்கின்றது. எனவே, எதிர் காலத்தில் இம்மாதிரியான நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக விமான போக்குவரத்தில் சில அதிரடி மாற்றங்கள் (நடவடிக்கைகள்) எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சமூக இடைவெளிவிட்ட இருக்கைகள், நோய் தொற்றை தவிர்க்கின்ற வகையிலான காண்ணாடி பெட்டக அமைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் பரிந்துரைத்து வருகின்றன.

இந்நிலையில், சில வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், பாஸ்போர்ட்டைப் போல் இனி கட்டாயம் முக மூடி (மாஸ்க்) அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்க தொடங்கியிருக்கின்றன.

ஏற்கனவே, இம்மாதிரியான அறிவிப்பை ஒரு சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், தி டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியிருக்கின்றன.

உலக நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காதான் தற்போது இந்த கொடிய வைரசின் காரணமாக கடுமையாக பாதித்து வருகின்றது. இங்கு நாளுக்கு நாள் ஆயிரக் கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதித்த வண்ணம் இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான அவலநிலையை தவிர்க்கும் விதமாகவே அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்கள் கட்டாய மாஸ்க் திட்டத்தை அறிவித்திருக்கின்றன.

இதேபோன்றதொரு அறிவிப்பை லுஃப்தான்சா ஏர்லைன்ஸ், சுவிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் ஆகிய மூன்று ஐரோப்பிய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் பின்னரே அமெரிக்க விமான நிறுவனங்களும் இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஜெட் ப்ளூ மற்றும் தி ஃபிண்டியர் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களான முகமூடி அணிவதை கட்டாயமாக்கியிருக்கின்றன.
இன்னும் பெரும்பாலான நாடுகளில் விமான போக்குவரத்து சேவை தொடங்காத காரணத்தால் பல நிறுவனங்கள் தற்போது இதுமாதிரியான பாதுகாப்பு திட்டத்தை அறிவிக்காமல் இருக்கின்றன.

ஆனால், அவை மிக விரைவில் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்த தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வலியுறுத்தலாம் என தெரிகின்றது.
தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கும் அமெரிக்கி விமான நிறுவனங்கள் கட்டாய முகமூடி திட்டத்தை வருகின்ற 11ம் தேதி முதல் அமல்படுத்த இருக்கின்றன.

எனவே, விமானத்தில் பயணிக்கும்போது முழுமையாக முகத்தை மூடுதல் அல்லது மாஸ்க் அணிவது அந்நாட்டில் கட்டாயமாகியுள்ளது.
தற்போது, இருசக்கர வாகனத்தில் பயணிப்பதற்கே இந்திய அரசு முக மூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, நோய் தொற்று சக பயணிகளுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, விமான நிறுவனங்கள் கட்டாய மாஸ்க் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன.
இதுபோன்று, மாஸ்க் அணிந்து வருவதன் மூலம் நோய் தொற்று விமானத்தில் பயணிக்கும் சக பயணிகளுக்கு பரவுவது தவிர்க்கப்படும். இதனால், நோய் பரவும் தன்மை கணிசமாக கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

அதேசமயம், முக மூடி மட்டுமின்றி சானிட்டைசர் போன்ற கிருமி நாசினிகளைப் பயன்படுத்தவும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன. குறிப்பாக, விமானத்தில் பயணிக்கும்போது மற்றும் தரையிறங்கும் என அவ்வப்போது அதனைப் பயன்படுத்திக் கைகளை சுத்தம் செய்துகொள்ளுமாறு ஒவ்வொரு பயணிக்கும் அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும், பயணிகள் மட்டுமின்றி விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என விமான நிறுவனங்கள் உத்தரவிட்டிருக்கின்றன. எனவே, இனி விமானத்தில் வரும் ஏர்-ஹோஸ்டர் பெண்கள் தங்களின் முகத்தை மாஸ்க் அல்லது கண்ணாடி மாஸ்க் கொண்டு மறைத்தவாரே வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








