Just In
- 39 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 49 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்
சமீப காலமாக பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தைக்கு, சொகுசு கார்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. அது ஏன்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். இதன் காரணமாக புதிய கார்களின் விற்பனை உயரும் என சமீப காலமாக வெளியாகி வரும் பல்வேறு ஆய்வுகள் அடித்து கூறி வருகின்றன. ஆனால் புதிய கார்களை விட யூஸ்டு கார்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குஜராத் மாநிலத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் கொரோனா வைரஸ் பிரச்னையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை பலரும் சந்தித்து வரும் சூழலில், புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்கள் நல்ல தேர்வாகவே பார்க்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். இன்னும் பலர் சம்பள குறைப்பு பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில் பலருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டிருந்த பலர் தற்போது, அந்த முடிவில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.
எனினும் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் அச்சம் இருப்பதால், கார் அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களின் கவனத்தை பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை ஈர்த்து வருகிறது. வாங்கி ஒரு வருடம் மட்டுமே ஆன கார் ஒன்று, சுமார் 25 சதவீத குறைவான விலையில் கிடைத்தால், அதை வீட்டிற்கு ஓட்டி செல்வதில் மக்களுக்கு தயக்கம் இருப்பதில்லை.
குஜராத்தை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர் 39 லட்ச ரூபாய் மதிப்புடைய எஸ்யூவி ரக கார் ஒன்றை வாங்குவதற்காக பணம் ஒதுக்கியிருந்தார். ஆனால் அவர் வாங்க திட்டமிட்டிருந்த அதே கார் சுமார் 25 சதவீத குறைவான விலையில் கிடைக்கிறது என்ற தகவல் தெரிந்தவுடன், புதிய கார் வாங்கும் திட்டத்தை அவர் ஒதுக்கி வைத்து விட்டார்.
25 சதவீத குறைவான விலையில் கிடைத்த கார், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கப்பட்டது ஆகும். அதாவது இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த கார் 14,000 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது. அத்துடன் வாரண்டி காலத்திற்கு உள்ளாகவும் இருக்கிறது. எனவே இந்த காரை வாங்குவதுதான் நல்ல முடிவாக இருக்கும்'' என்றார்.
கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்டதற்கு பின்னர் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால், முன்னணி நிறுவனங்களே திணறலுக்கு ஆளாகியுள்ளன. நிலைமை இப்படி இருக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையோ பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 50 சதவீதம் என்கிற அளவிற்கு, விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன், புதிய கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. தற்போது அந்த நிலைமையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதாவது புதிய கார்களின் விற்பனை சற்று மீண்டுள்ளது. ஆனால் புதிய கார் சந்தையுடன் ஒப்பிடும்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை, பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில், விலை குறைவான மாடல்களின் விற்பனையுடன் சேர்த்து, சொகுசு கார்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில், பிரீமியம் செக்மெண்ட் மாடல்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 25 முதல் 30 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் கூறுகையில், ''பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் உள்ள அச்சம் காரணமாக யூஸ்டு கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது.
குறிப்பாக நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற சிறிய கார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் கிடைக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தேவை இருக்கவே செய்கிறது. தற்போது பல லட்ச ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்கள் கூட எங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.
சம்பளம் குறைப்பு காரணமாக, இந்த கார்களை வாங்கிய நபர்களால், மாத தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. எனவே அவர்கள் எங்களிடம் கார்களை விற்பனை செய்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் இந்த சொகுசு வாகனங்கள் குறைவான விலையில் கிடைப்பதால், அவற்றை வாங்கவும் பலர் விரும்புகின்றனர்.
அதே சமயம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் உள்ள வாடிக்கையாளர்கள் 2 முதல் 2.5 லட்ச ரூபாய் வரையுள்ள சிறிய கார்களை எங்களிடம் தேர்வு செய்கின்றனர். எங்களிடம் வரும் 90 சதவீத வாடிக்கையாளர்கள், புதிய கார் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தவர்கள்தான்.
எனினும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் முடிவுக்கு அவர்கள் தற்போது வந்து விட்டனர்'' என்றனர். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் இருப்பதால், இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் ஓரளவிற்கு உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!