Just In
- 38 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு!
கடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், டீசல் கார்கள் விற்பனை குறித்த முக்கிய முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 எஞ்சினுடன் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலையை நெருங்கும் அளவுக்கு டீசல் விலையும் உயர்ந்துவிட்டது.
இதுதவிர்த்து, எதிர்காலத்தில் மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக, டீசல் கார்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனால், டீசல் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.
இவற்றை மனதில் வைத்து, பெரும்பாலான கார் நிறுவனங்கள் டீசல் கார் மாடல்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டீசல் கார் விற்பனைக்கு முற்றிலுமாக முழுக்கு போடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
தற்போது டீசல் கார்களுக்கு இணையான அனுபவத்தை தரும் வகையில், டர்போசார்ஜருடன் இயங்கும் தனது டிஎஸ்ஐ வகை பெட்ரோல் எஞ்சின்களுடன் கார்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் டீசல் கார் அறிமுகம் குறித்த திட்டம் எதையும் அந்நிறுவனம் வகுக்கவில்லை.
ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய கார்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். டீசல் எஞ்சின் தேர்வுகளில் இனி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி கூறுகிறது.
மேலும், எஸ்யூவி கார் மாடல்களை களமிறக்குவதில் அதிக கவனம் செலுத்தவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று கருதுகிறது.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!