Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி குறித்த ஒரு சூப்பர் நியூஸ்!
வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி உற்பத்தி குறித்து சூப்பரான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் கார் சந்தை வலுவடைந்து வரும் நிலையில், வால்வோ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் அடுத்த ஆண்டு 5 ஆண்டுகளில் பல புதிய சொகுசு ரக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் முதலாவாதக எக்ஸ்சி40 எஸ்யூவியின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் உற்பத்தி முறைப்படி துவங்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவிலும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
வால்வோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த கீலி குழுமத்துடன் இணைந்து இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாலை காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர்(CMA) என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறது.
புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் சோதனை தரவுகளின் அடிப்படையில் 399 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை இதன் மின் மோட்டார் பெற்றுள்ளது.
இந்த புதிய சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்துவிட முடியும். சீனாவை சேர்ந்த சிஏடிஎல் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி கெம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பேட்டரியை சப்ளை பெறுவதற்கு வால்வோ திட்டமிட்டுள்ளது.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு அதிக டிமான்ட் இருப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட இருக்கும் அனைத்து ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார்களும் விற்று தீர்ந்து விட்டதாகவும் வால்வோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் உள்ள வால்வோ கார் ஆலையில்தான் இந்த புதிய ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. குறைபாடுகள் இல்லாமல் கார்களை உருவாக்குவதற்கான மிக மேம்பட்ட முறை பின்பற்றப்படும் என்றும் வால்வோ தெரிவித்துள்ளது. 55,000 டாலர் விலையில் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
வால்வோ கார்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. அந்த வகையில், ரீசார்ஜ் எஸ்யூவியின் பாதுகாப்பை அதிகபட்ச உறுதி செய்யும் விதத்தில், முன்புற கட்டமைப்பு மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், சாதாரண கார்களை போல எஞ்சின் பொருத்துவதற்கான இடம் மிச்சப்படுத்தப்படுவதால், பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதியை வழங்கும்.
எதிர்காலத்தில் முழுமையான எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைப்ரிட் கார் மாடல்களும் ரீசார்ஜ் குடும்ப வரிசையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வால்வோ தெரிவித்துள்ளது. வரும் 2025ம் ஆண்டில் தனது விற்பனையில் 50 சதவீத பங்களிப்பை பேட்டரியில் இயங்கும் மாடல்கள் மூலமாக பெறுவதற்கான திட்ட இலக்குடன் வால்வோ செயலாற்றி வருகிறது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!