வெறும் 250 ரூபாயில் கார்களில் கிருமிநீக்கம் செய்து தரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ்!
மிக மிக குறைவான கட்டணத்தில் கார்களுக்கான கிருமி நீக்கம் செய்து தரும் திட்டத்தை விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த இந்த திட்டம் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் கார்களில் பயணிப்பதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கார்களில் கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியமாகி உள்ளது. இதனால், இந்த சேவையில் பல நிறுவனங்கள் வழங்கத் துவங்கி இருக்கின்றன.

அந்த வகையில், கார்களின் கண்ணாடிகளை சரிசெய்து தரும் சேவைகளில் ஈடுபட்டு வரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் கொரோனாவை கருத்தில்கொண்டு புதிய சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மிக குறைவான கட்டணத்தில் மதிப்புமிக்க கிருமி நீக்க சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தருணத்தில் இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் என்று தெரிகிறது.

கார்களை கழுவி சுத்தப்படுத்தி, கிருமிகளை அழிக்கும் ரசாயன தெளித்து தரும் பணியுடன் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. கிருமி நீக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ரசாயனமானது காரின் உட்புற பாகங்களை பாதிக்காத வகையில் விசேஷ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஸ்பிரே மூலமாக காரில் படிந்திருக்கும் அழுக்குகள், கறைகள் நீக்கப்படுவதுடன், பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை கொல்லும் தன்மை வாய்ந்தது. அத்துடன், இது பாதுகாப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர், டெல்லி, குர்கான், சண்டிகர், நொய்டா ஆகிய நகரங்களில் இந்த சர்வீஸ் திட்டத்தை விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

கொரோனா பிரச்னையால் கார்களில் கிருமிநீக்கம் செய்து பெறுவதற்கு திட்டமிடுவோருக்கு இது சிறந்ததாக இருக்கும் என்று விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களை பொறுத்து ரூ.250 முதல் ரூ.350 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








