Just In
- 30 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 48 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இணையத்தில் காசு பாக்க யுட்யூபர் செய்த காரியம்... வாயடைத்து போன தாய்-தந்தை... என்ன செய்தார் தெரியுமா?
இணையத்தில் காசு பார்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த காரியம் அவரின் பெற்றோர்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இளைஞர்கள் மத்தியில் யுட்யூப் மோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, இணையம் வாயிலாக காசு பார்க்க வேண்டும் என நினைப்போர்களின் முதல் தேர்வாக யுட்யூப் உள்ளது. எனவேதான் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் புதிய சேனல்கள் யுட்யூபில் தொடங்கப்பட்டு வருகின்றன. எனவே இதில் போட்டி சற்று அதிகம் என்றே கூறலாம்.
இந்த போட்டியைச் சமாளிக்கவும், எப்படியாவது பார்வையாளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் சில முரண்பாடான செயல்பாடுகளில் ஈடுபடுவதுண்டு. அதாவது, அதிக லைக்ஸ்களையும், பார்வையாளர்களையும் அதிகளவில் பெற வேண்டும் என்பதற்காக விதிமீறல் செயலில் ஈடுபடுகின்றனர். இது அவர்களை ஃபேமஸாக்குகின்றதோ, இல்லையோ, ஆனால் சிக்கல்களுக்கு ஆளாக்கிவிடுகின்றது.
ஆனால், நாம் இப்போது பார்க்கவிருக்கும் யுட்யூபர் பற்றிய தகவல் சற்று வித்தியாசமானதாகும். இவர், அதிக பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காக விநோதமான செயலைச் செய்திருக்கின்றார். இதற்காக அண்மையில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய தார் எஸ்யூவி காரை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த கார் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, முன்பு ஆஃப்-ரோடு பயணத்திற்கு மட்டுமே ஏற்ற வாகனமாக காணப்பட்ட இதனை, மஹிந்திரா நிறுவனம் தினசரி பயணம் மற்றும் குடும்ப பயணம் ஆகியவற்றிற்கு ஏற்ப புதிய வசதிகளுடன் களமிறக்கியிருக்கின்றது. இதனை ஆராய்வதற்காகவே யுட்யூபர் இக்காரில் தனது குடும்பத்தினரை அழைத்துச் சென்று அவர்களுடைய அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.
'சூப்பர் ரைடர் சிவம்' எனும் யுட்யூப் சேனலைச் சார்ந்தவரே இந்த சம்பவத்திற்கு உரியவர் ஆவார். இவரே, மஹிந்திரா நிறுவனத்தின் ஷோரூம் வாயிலாக தார் எஸ்யூவி காரை வரவழைத்து, அக்கார் குடும்பத்திற்கு ஏற்ற காரா என்ற பரிசோதனையை மேற்கொண்டிருக்கின்றார். யுட்யூபரின் இந்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, இருசக்கர வாகனங்களை மட்டுமே ரிவியூ செய்யும் இவர் மஹிந்திரா தார் கார்மீதிருந்த அதீத ஆர்வம் காரணமாக அக்காரை தற்போது ரிவியூ செய்திருக்கின்றார். இதற்காக, தார் எஸ்யூவி காரை அதன் ஷோரூமில் இருந்த எடுத்த அவர், ஷோரூமின் நிர்வாகம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட நபரை பின்னிருக்கையில் அமர வைத்துவிட்டார். தொடர்ந்து, அவரது அம்மாவை தன்னுடன் டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர வைத்துக்கொண்டார்.
பின்னர், அவரது தந்தையை பின்னிருக்கையில் அமர வைத்துக் கொண்டார். ஆகையால், பின்னிருக்கை மற்றும் முன்னிருக்கையின் அனுபவங்களைக் குடும்பத்தாரிடம் இருந்து பெறும் விதமாக இவ்வாறு அவர் செய்திருக்கின்றார். ஆகையால், இவர்களால் தார் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடிந்தது. மேலும், நமக்கும் அதுகுறித்த தகவலை விளக்கும் விதமாக அதுகுறித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இக்கார் மஹிந்திரா நிறுவனத்தின் கூற்றின்படி தார் எஸ்யூவி ஆஃப்-ரோடு பயணத்திற்கு மட்டுமின்றி குடும்ப பயணத்திற்கும் ஏற்ற கார் என்பது தெரியவந்துள்ளது. காரில் மூவரையும் இக்கார் அதிகளவில் கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, பிற கார்களைக் காட்டிலும் இது சற்று மனம் கவரும் வாகனமாக இருப்பதாக யுட்யூபர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இருக்கை, இயங்கும் திறன், பெர்ஃபார்மன்ஸ் என அனைத்திலும் தார் எஸ்யூவி அட்டகாசமானதாக இருந்ததாக யுட்யூபரின் குடும்பம் தெரிவித்துள்ளது. இதில், அவர்கள் கண்ட ஒரே ஒரு அசௌகர்யமான உணர்வு, காலின் தொடைக்குக் கீழே ரெஸ்ட் பேட்கள் இல்லாதது மட்டுமே என கூறியிருக்கின்றனர். இதைத் தவிர அனைத்து வழிகளிலும் தார் எஸ்யூவி சிறந்த கார் என்ற கருத்தே அவர்களிடத்தில் இருந்து கேட்க முடிகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் தார் காரின் வசதியைக் கண்டு அவர்கள் வாயடைத்துப் போயிருக்கின்றனர் என்றே கூறலாம்.
மஹிந்திரா தார் எஸ்யூவி இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்ர் டீசல் எஞ்ஜின் ஆகும். இதில், பெட்ரோல் எஞ்ஜின் 152 எச்பி மற்றும் 320 என்எம் டார்க்கையும், டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 132 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய இரு எஞ்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன. இக்கார் குடும்பம், ஆஃப்-ரோடு மற்றும் தினசரி பயனர் என அனைத்து தரப்பு பயண பிரயர்களையும் கவர்ந்து வருகின்றது. இதற்கு இக்காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகளும், குறைந்த விலையுமே காரணமாக இருக்கின்றது.
மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 9.80 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் உயர் நிலை மாடலுக்கு ரூ. 12.95 லட்சங்கள் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். மேலும், இக்கார் ஆறு இருக்கைகள், 4 இருக்கைகள் என்ற தேர்விலும் கிடைக்கின்றது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..