Just In
- 2 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 4 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 9 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 11 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- Movies கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
- News மயிலாப்பூரில் இரவில் என்ன சத்தம்? சென்னையில் கரண்ட் கட்? அதிரடியில் குதித்த மின்சார வாரியம்.. சபாஷ்
- Lifestyle அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- Finance குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டிக்டாக்-ஐ தடை செய்த அடுத்த முக்கிய நாடு..!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் புதிய தகவல்களை கூறியுள்ளார். அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்களில் 50 சதவீத வாகனங்கள், அடுத்த 2-3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்யப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தற்போது தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''அரசுக்கு சொந்தமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் 50 சதவீத வாகனங்களை, எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றி விடுவோம்'' என்றார். கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், ஐடி பார்க்குகள், அப்பார்மெண்ட்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் இல்லாத காரணத்தால்தான், பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பெங்களூர் மற்றும் மைசூர் இடையே உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்படும். எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவை. அவற்றை இயக்குவதற்கும் குறைந்த செலவுதான் ஆகும்'' என்றார்.
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இதுபோல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களும் வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.
டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். மத்திய அரசும் தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி உந்தி தள்ளி வருகிறது. ஆனால் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் குறிப்பிட்டதை போல், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாகனங்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.
இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை உயர்த்துவதற்காக, எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!