நம்ம ஆளுங்க வேற லெவல்! சரக்கை ஒளித்து வைக்க மினி வேனில் ரகசிய அறை... சினிமாவில்கூட இப்படி நடந்து இருக்காது...
மதுபானங்களை ஒளித்து வைப்பதற்காக உருவாக்கிய ரகசிய அறையைக் கண்டு போலீஸாரே வியந்துபோயிருக்கின்றனர். இதுகுறித்த சமீபத்தில் வெளியாகிய ஆச்சரிய தகவலைக் கீழே காணலாம்.

குஜராத் மாநிலத்தில் மது மற்றும் பிற போதை பொருட்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசுக்கு தெரியமால் மது விற்பனை கொடி கட்டி பறந்து வருகின்றது. என்னதான் போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டாலும் அங்கு சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டும் எப்படி அவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றதோ, அதேபோன்று, குஜராத்திலும் மது விற்பனை சட்டத்திற்கு புறம்பாக மிக சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.

காவல்துறையின் அதிக கெடுபிடிகளைத் தாண்டியும் ஒரு சிலர் மதுபானங்களைக் கடத்தி சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பனைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சந்தையில் விற்பனைக்கு செய்வதற்காக மினி லோடு வேன் மூலம் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை வாகன தணிக்கையின்போது குஜராத் மாநில காவல்துறை பறிமுதல் செய்திருக்கின்றது.

இதுகுறித்த வீடியோவையே மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். மாதுபாதனத்தைக் கடத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய யுக்தி பலரை வியக்கச் செய்துள்ளது. அவ்வாறு, வியந்த காரணத்தினாலயே இவ்வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

மதுபான கடத்தல்காரர்கள் பாட்டில்களை மறைத்து வைப்பதற்காக மினி லோடு வேனின் சரக்கு ஏற்றும் பகுதியை மாற்றியமைத்திருக்கின்றனர். வாகனத்தின் அடிப்பகுதியில் டேபிள்களில் இருப்பதைப் போன்று அறை உருவாக்கியிருக்கின்றனர். இதிலேயே மதுபானங்களை மறைத்து வைத்து அவர்கள் எடுத்து வந்திருக்கின்றனர்.

இருப்பினும், வாகன தணிக்கையின்போது போலீஸார் கண்களில் இது சிக்கியிருக்கின்றது. வாகனத்தின் லோடு ஏற்றும் பகுதி வழக்கத்திற்கு மாறான உருவத்தில் இருப்பதை உணர்ந்த போலீஸார், அதனை ஆராயத் தொடங்கினர். இதனடிப்படையிலேயே பல நூறு மதுபான பாட்டில்கள் அதில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து வாகனத்தையும், பதுக்கி எடுத்து வரப்பட்ட மதுபான பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னதாகவும் இதுபோன்று மதுபான பாட்டில்கள் கடத்தும் சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் முதல் சொகுசு கார்கள் வரையில் இந்த சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பிணையில் விடுவிக்க முடியாத வகையில் பறிமுதல் செய்யப்படும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே சரக்கு வாகனத்தை சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட மினி லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது.

அதிலும், மதுபான பாட்டில்களைக் கடத்தி வருவதற்காகவே செய்யப்பட்டிருக்கும் பிரத்யேக வடிவமைப்புகள் போலிஸாரையே வியக்க வைத்திருக்கின்றது. இதனை கொடூரமான புத்திசாலி தனம் என குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, "இதுபோன்ற வடிவமைப்புகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம்" என அவர் கூறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








