Just In
- 1 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 57 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
Don't Miss!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?
சித்தூரில் புதிய டயர் தொழிற்சாலையை அப்பல்லோ நிறுவனம் அமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் பகுதியில் அப்பல்லோ டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து முதல் பேட்ஜ் டயர்கள் கடந்த மே 25ம் தேதி வெளிவந்துள்ளன. சித்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை உலக அளவில் பார்த்தால், அப்பல்லோ டயர் நிறுவனத்தின் 7வது தொழிற்சாலை ஆகும்.
அதே சமயம் இந்திய அளவில் பார்த்தால் இது அந்த நிறுவனத்தின் 5வது தொழிற்சாலை ஆகும். சின்னபண்டுரு என்ற கிராமத்தில், அப்பல்லோ டயர் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 256 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
சித்தூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஆரம்ப கட்டத்தில் 3,800 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு அப்பல்லோ டயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 12-18 மாதங்களில் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி திறனை படிப்படியாக அதிகரிப்பதற்கும் அப்பல்லோ டயர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி 2022ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் பயணிகள் கார் டயர்களையும், 3 ஆயிரம் லாரி டயர்களையும் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் டயர்களுக்கான தேவை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த புதிய தொழிற்சாலை செயல்படும்.
இந்தியாவில் வர்த்தக வாகனங்களுக்கான டயர்களை விற்பனை செய்வதில் அப்பல்லோ டயர் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வர்த்தக வாகனங்களுக்கான டயர்களில் 60 சதவீத டயர்கள் அப்பல்லோ டயர் நிறுவனத்துடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்த சூழலில் சித்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலை டயர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும். அத்துடன் சந்தையில் அப்பல்லோ நிறுவனத்தின் நிலையை வலிமையாக்குவதிலும் இந்த சித்தூர் தொழிற்சாலை முக்கியமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அப்பல்லோ டயர் நிறுவனம் தனது நிலைமையை வலிமையாக்கி கொள்வதற்கு இந்த புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்னையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிந்த பிறகு டயர்களுக்கான தேவை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்வதில் சித்தூர் அப்பல்லோ தொழிற்சாலை முக்கிய பங்காற்றும்.
Note: Images used are for representational purpose only.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?