2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?
ஆடி இந்தியா நிறுவனம் அதன் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இ-ட்ரானை வருகிற ஜூலை 22ஆம் தேதி அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இ-ட்ரான் & இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் என்ற இரு விதமான உடற் அமைப்புகளில் இந்த இ-எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இந்த ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் இ-ட்ரான் மாடல் 50, 55 என்ற இரு வெர்சன்களில் கிடைக்கவுள்ளது. அதேநேரம் ஸ்போர்ட்பேக் தோற்றத்திலான இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் மாடல் 55 வெர்சனில் மட்டுமே கிடைக்குமாம். ஆடி இ-ட்ரான் 50 வெர்சனில் 71 கிலோவாட்ஸ் பேட்டரி தொகுப்பு இயக்க ஆற்றலை வழங்குவதற்காக பொருத்தப்பட உள்ளது.

எலக்ட்ரிக் மோட்டாரில் அதிகப்பட்சமாக 308 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பேட்டரி தொகுப்பின் மூலம் 264 கிமீ-இல் இருந்து 379கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த 71 கிலோவாட்ஸ் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 379கிமீ வரையில் பயணிக்கலாம். இ-ட்ரான் 55 வெர்சனில் இதனை காட்டிலும் சற்று பெரியதான 95 கிலோவாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.

இது அதிகப்பட்சமாக 402 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும், 359கிமீ-இல் இருந்து 484கிமீ வரையிலான ரேஞ்ச்சையும் வழங்கக்கூடியது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரு வெர்சன்களிலும் அனைத்து-சக்கர-ட்ரைவ், அட்வான்ஸான ஸ்டேரிங் சக்கரம், அடாப்டிவ் காற்று சஸ்பென்ஷன், 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மாட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் நிலையாக வழங்கப்படவுள்ளன.

இந்த முழு-எலக்ட்ரிக் ஆடி காரில் நேரடி மின்னோட்டம்/ மாறுதிசை மின்னோட்ட சார்ஜிங் துளைகள் முன்பக்க ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளன. 11 கிலோவாட்ஸ் மாறுதிசை வீட்டு மின்சாரத்தை உபயோகித்து இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை முழுவதுமாக 8.5 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றிவிடலாமாம்.

அதேநேரம் 150 கிலோவாட்ஸ் வரையிலான விரைவு நேரடி மின்சார சார்ஜரை பயன்படுத்தினால் இதன் பேட்டரியை வெறும் அரை மணிநேரத்தில் முழுவதுமாக நிரப்பிவிடலாம். இரு மாடல்களில் இ-ட்ரானை அறிமுகப்படுத்தவுள்ளது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி பல்பிர் சிங் தில்லோன் பேசுகையில், ஸ்போர்ட்பேக் எஸ் 5 உடன் இ-ட்ரான் மாடலின் ஒட்டுமொத்த வரிசையையும் இரு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த மூன்று இ-ட்ரான் மாடல்களை வைத்து இந்தியாவில் முதன்முதலாக கார் வாங்க உள்ளவர்களையும், எலக்ட்ரிக் கார் பக்கம் வர இருப்போரை கவர்வதையும், நாட்டில் ஆடம்பர மின்சார கார் இயக்கத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications








