Just In
- 11 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 30 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு! காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்
ஆடி க்யூ7 சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ. 17.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெலங்கானா நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் ராஜூ. இவர், கடந்த 2013ஆம் ஆண்டு ரூ. 60 லட்சம் செலவில் புதிய ஆடி க்யூ7 3.0டிடிஐ மாடல் சொகுசு காரை பயன்பாட்டிற்கு வாங்கினார். இதற்கு ரூ. 1.12 லட்சம் செலவில் இன்சூரன்ஸ் பிரீமியத்தையும் காரின் கொள்முதலின்போதே அவர் பெற்றார்.
இந்நிலையில், சரியாக காரை வாங்கி பத்து மாதங்களான நிலையில், அதாவது, கடந்த 2013 செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் நகரத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளக் காடாக மாறியது. குறிப்பாக, ஜூபிலி ஹில்ஸ் போன்ற தாழ்வான பகுதிகளில் முதல் தளம் மூழ்குமளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.
அதிகளவு வெள்ள நீரால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் ராஜுவை கேபிஆர் பார்க் எனும் பகுதியிலேயே காரை நிறுத்துவிட்ட செல்ல நேரிட்டது. அதிக மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீர் காரை மூழ்குமளவிற்கு சூழ்ந்தது. இதனால், காரை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, மறு நாள் வெள்ள நீர் வடிந்த பின்னர் ராஜு கார் இருக்கும் பகுதிக்கு விரைந்தார்.
Source: TOI
தொடர்ந்து, காரை இயக்கும் விதமாக பலவித முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், காரோ சிறிதளவுகூட அசைந்துக் கொடுக்கவில்லை. இதனால், ஆடி நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தின் உதவியை அவர் நாடினார். இங்கு ஊழியர்கள் சிலர் வழிகாட்டியதன் அடிப்படையில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உரிய இழப்பீடைப் பெறும் முயற்சியில் களமிறங்கினார்.
ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமோ ராஜூ மீது பழிபோட்டுவிட்டு, இந்த கோளாறுகளுக்கு எங்களால் தீர்வு வழங்க முடியாது என கையை விரித்துவிட்டது. மழை நீரில் முழுமையாக மூழ்கியநிலையில் காரை இயக்கும் விதமாக முயற்சி செய்தது மிகப்பெரிய தவறு என்றும், இதனால், காரில் மேலும் பல பாகங்கள் கூடுதலாக பாதிப்பைச் சந்தித்திருப்பதாகவும், இழப்பீட்டை நிராகரிப்பிற்கான காரணமாக காப்பீட்டு நிறுவனம் கூறியது.
ஆடி க்யூ7 காரை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டு வர ரூ. 20 லட்சம் வரை ராஜூ செலவு செய்ததாகக் கூறப்படுகின்றது. இது மிகப்பெரிய தொகை என்பதால் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, தெலுங்கானா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையத்திடம் அவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றமே சுமார் 7 ஆண்டுகளானநிலையில் தற்போது உரிய தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. ஆடி க்யூ7 சொகுசு கார் உரிமையாளருக்கு சாதகமான தீர்ப்பை அது வழங்கியிருக்கின்றது. ரூ. 17.54 லட்சத்தை 7சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிமையாளரின் கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டுவிட்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் கருதியது தவறு என்பதைச் சுட்டிக் காட்டிய நுகர்வோர் மன்றம் இந்த அபராதத்தை உடனடியாக செலுத்தும்படி உத்தரவிட்டிருக்கின்றது. முன்னதாக, உரிமையாளர் மீது முழு தவறும் இருப்பதாக கூறிய காப்பீட்டு நிறுவனம், ரூ. 53 ஆயிரம் வரை இழப்பீடாக வழங்குவதாக கூறியிருந்தது.
ஆனால், தான் செலவு செய்தது ரூ. 20 லட்சம் என்பதானலேயே, இதற்கான உரிய இழப்பீடு வெண்டும் என எண்ணி நுகர்வோர் மன்றத்தை ராஜூ நாடினார். இதற்கான பலனையும் அவர் தற்போது பெற்றிருக்கின்றார்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!