மீண்டும் விற்பனைக்கு வருகிறதா பஜாஜ் க்யூட்? ரொம்ப சந்தோஷப்படாதீங்க அந்த துறைக்காக மட்டுமே வருகிறதாம்!!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் க்யூட் குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தை மீண்டும் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபலமான வாகன மாடல்களில் க்யூட் என்ற மாடலும் ஒன்று. இது ஓர் குவாட்ரிசைக்கிள் ரக வாகனமாகும். இந்த வாகனத்தை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்திய சந்தையை விட்டு பஜாஜ் வெளியேற்றியது.

அதேசமயம், உலக நாடுகள் சிலவற்றில் இந்த வாகனத்தை தற்போதும் பஜாஜ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது ஓர் பட்ஜெட் விலை வாகனமாகும். ஆம், மிக குறைந்த விலையில், அதாவது, 2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் இது விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

இந்த வாகனத்தையே தற்போது மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு களமிறக்க பஜாஜ் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் வெளியாகியிருக்கும் தகவல்கள் உறுதியாக கூறுகின்றன.

ஆகையால், இந்திய பட்ஜெட் வாகன பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், பஜாஜ் நிறுவனம் இந்த வாகனத்தை வாடகை வாகன துறைக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஆம், தனி நபர் விற்பனைக்கு க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை அறிமுகம் செய்யப்போவதில்லை என பஜாஜ் அறிவித்துள்ளது. இந்த வாகனம் கார் போன்று காட்சியளித்தாலும் இது கார் இல்லை என்பதே உண்மை. மேலும், மூன்று சக்கர வாகனங்களில் பயணிப்பதற்கு இணையான செலவே இந்த வாகனத்தில் பயணிக்கும்போது ஏற்படும்.

எனவேதான் வார்த்தக வாகனத்துறையின்கீழ் இந்த வாகனம் களமிறக்கப்பட இருக்கின்றது. பஜாஜ் க்யூட் மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கும் அடோம் எனும் குவாட்ரிசைக்கிள் வாகனத்திற்கு போட்டியாக மறு பிறவி பெற இருக்கின்றது. அடோம் அடுத்த வருடம் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் குவாட்ரிசைக்கிள் ரக வாகனம் க்யூட் ஆகும். இதனை கேரளா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மிக குறுகிய மாநிலங்களில் மட்டுமே பஜாஜ் விற்பனைக்கு வழங்கியது. இதையடுத்து புதிய விதிகள் காரணமாக இந்த வாகனம் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது.

தற்போது பிறவி எடுத்து மீண்டும் இந்திய சந்தையில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. ஆனால், வர்த்தக வாகன பிரிவின் வாயிலாகவே இந்த வாகனம் மீண்டும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதற்காக நிறுவனம் உபேர் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், இந்த இணைவின்கீழ் சோதனையோட்டமாக கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் க்யூட்டை பயன்பாட்டிற்கு களமிறக்க இருப்பதாகவும் பஜாஜ் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








