மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

குதிரை இல்லா சாரட் வண்டி மீண்டும் குறிப்பிட்ட நகரத்தில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

குதிரைகள் மூலம் ஓடக்கூடிய சாரட் வண்டிகள் முந்தைய காலங்களில் அதிக புகழ்வாய்ந்தவையாக இருந்தன. பொதுபோக்குவரத்து போன்ற பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இவ்வாகனம், நாளடைவில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளில் மட்டுமே பயன்படக் கூடிய வாகனமாக மாறியது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

இருப்பினும், அவற்றை நாடு முழுவதும் பரவலாகக் காண முடிந்தது. கடுமையான விதிகள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவை இணைந்து இந்த வாகனத்தின் பயன்பாட்டை முழுமையாக ஒழித்தே விட்டது. எனவே, தற்போது குதிரைகளை மட்டுமே கடற்கரை மற்றும் சில சுற்றுலா தளங்களில் மட்டுமே காண முடிகின்றது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

சுப நிகழ்வு ஊர்வலங்களுக்கு பலர் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால், இந்த வாகனங்கள் பயன்பாட்டிலேயே இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது. எனவே, சாரட் வாகனங்கள் வண்டிகள் தற்போது புழுதி படிந்து, இயற்கைக்கு (தூசி, மழை உள்ளிட்டவற்றிற்கு) இரையாகி வருகின்றது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

குதிரை சாரட் வாகனங்கள் மஹாராஷ்டிராவின் மும்பை நகரத்திலேயே அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன. இந்த நிலையிலேயே சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றம் குதிரை சாரட் வண்டிகள் இயக்கத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

இதனால், சாரட் ரக வாகனங்களை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்தி வந்த பலர் வாழ்வாதரத்தை இழந்து, பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையிலும், சிலர் சாரட் வாகனங்களைப் பராமரித்து வருவாதகக் கூறப்படுகின்றது. அத்தகைய வாகனங்களை மின் இயக்கத்திற்கு மாற்றி மீண்டும் சாலையில் இயக்குவதற்கு அனுமதிக்குமாறு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

இதனால் மீண்டும் மும்பை நகரத்தில் சாரட் வண்டிகள் இயங்குவதற்கான சாத்திய கூறுகள் உருவாகியிருக்கின்றது. உபோ ரைடஸ் (UBO Ridez) எனும் நிறுவனத்தின்கீழ் இவ்வாகனங்கள் இயங்க இருக்கின்றன. ஆனால், இதில் குதிரைகளை நம்மால் காண முடியாது என்பது வருத்தத்திற்கு தகவல் ஆகும். குதிரையின் அழகு ஓட்டமில்லா (டொக் டொக் சத்தமில்லா) வாகனங்களே நகரத்தில் இயக்கப்பட இருக்கின்றன.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

குதிரைகளுக்கு பதிலாக மின் மோட்டார்களே இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல் கட்டமாக 10 வாகனங்கள் மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா, மரினே டிரைவ் மற்றும் நாரிமன் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!

Source: TOI

சாரட் வண்டிகள் ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு பேர் வரை பயணிக்கலாம். இவை, 19 சென்சூரிகளில் அதிக ஃபேமஸாக இருந்த வாகனங்கள். 2015 ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் இப்போதே அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அதுவும், குதிரைகள் இல்லாமல் அவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனங்களின் வருகையை எதிர்நோக்கி மும்பை வாசிகள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Article Published On: Monday, March 8, 2021, 20:24 [IST]
English summary
Battery-Pperated Carriages Are Set To Roll Out Soon In South Mumbai From Next Month. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+