விபத்தை ஏற்படுத்திய ஆடி சொகுசு கார்! தப்பி ஓடியவரால் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நடிகையின் கணவர்.. யார் அவர்
விபத்தை ஏற்படுத்திய ஆடி சொகுசு காரால் பிரபல நடிகையின் கணவர் பெரும் சிக்கலில் அண்மையில் சிக்கினார். போலீஸ்காரர்களையே மிரள வைத்த இந்த ட்விஸ்ட் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மோசமான விபத்து அரங்கேறியதாக அந்நகர காவல்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர். விபத்தை ஏற்படுத்தியவர் சூழ்நிலை மோசமானதை உணர்ந்து அந்த இடத்தை விட்டு உடனடியாக நழுவியிருக்கின்றார்.

ஆகையால், போலீஸார் சொகுசு காரின் பதிவெண்ணைக் கொண்டு வழக்கு பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடத்தியதில் விபத்தை ஏற்படுத்திய ஆடி ஆர்8 சொகுசு கார் பிரபல பாலிவுட் திரை நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவ் ராஜ் குந்த்ரா என்பவருக்கு சொந்தமானது தெரியவந்தது.

இவர் ஓர் தொழிலதிபர் ஆவார். இவரிடம் போலீஸார் விசாரனைச் செய்ததில், தான் இந்த காரை இரு மாதங்களுக்கு முன்னரே ஓர் கார் விற்பனையாளரிடத்தில் விற்பனைச் செய்துவிட்டதாக கூறியிருக்கின்றார். இதனால், போலீஸாரால் இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

மஹாராஷ்டிராவின் எம்எச் 02 பிபி 0010 (MH-02-BP-0010) என்ற பதிவெண்ணைக் கொண்ட சொகுசு காரின் தற்போதைய உரிமையாளர் என பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். விபத்து சம்பவம் ஞாயிறன்று சுமார் மதியம் 2.45 மணியளவில் நடைபெற்றிருக்கின்றது. இதனால், ஓரு ஆட்டோ மற்றும் இரு இரண்டு சக்கர வாகனங்கள் என கணிசமான வாகனங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கின்றன.

நல்ல வேலையாக யாருக்கும் எந்த ஆபத்தும் பெரியளவில் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின்பேரில் கப்பன் பார்க் பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக ஷில்பா ஷெட்டியின் கணவரிடத்தில் இருந்து காரை வாங்கி விற்பனைச் செய்த மொஹமத் சதாப் (27) எனும் டீலரிடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இவர், பிஎம்டி லே-அவுட், ஸ்டேஜ் 2 பகுதியில் வசித்து வருகின்றார். விசாரணையின்போதே திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

விபத்தின்போது இவரே அந்த சொகுசு காரில் இருந்திருக்கின்றார். நிலைமை மிக மோசமான காரணத்தினாலேயே தான் சம்பவ இடத்தில் இருந்து நழுவியதாக ஒப்புக் கொண்டார். இந்த ஒப்புதலைத் தொடர்ந்து போலீஸார் சதாப் மீது வழக்கு பதிந்து, அவரை சிறைபிடித்திருக்கின்றனர்.

விபத்தின்போது மொஹமத் சதாப் மது அருந்தியிருந்தாரா என்பது தெரிய வரவில்லை. இதுகுறித்த தகவல்கள் பின்னர் விசாரணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சதாப்பிற்கு இந்தியாவில் பல்வேறு கார் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே மும்பை கார் விற்பனையாளர் ஒருவரின் வாயிலாக ஷில்பாவின் கணவருக்கு சொந்தமான ஆடி ஆர்8 சொகுசு இவர் வாங்கியிருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 2.30 கோடி என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்சபட்ச மாடலின் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமானதாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலையுயர்ந்த சொகுசு காரைக் கொண்டே விபத்தை ஏற்படுத்திவிட்டு மொஹமத் சதப், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியிருக்கின்றார். இந்த விபத்தினால் சொகுசு கார் பலத்தை சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக காரின் முகப்பு பகுதி கடுமையாக பாதித்திருக்கின்றது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பாகங்கள் நொருங்கியிருக்கின்றன.
Source: TOI


Click it and Unblock the Notifications








