நகை கடைக்காரர் வாங்கிய மிக மிக உயரிய விலை கொண்ட சொகுசு கார்... மிரண்டு நிற்கும் ஒட்டுமொத்த கேரள மக்கள்!
ஒட்டுமொத்த கேரள மக்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் நகைக் கடைக்காரர் ஒருவர் மிக மிக அதிக விலைக் கொண்ட சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். அது என்ன கார், எந்த நகைக்கடைக்காரர் சொகுசு காரை வாங்கியவர் உள்ளிட்ட அனைத்து தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒட்டுமொத்த கேரள மக்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஓர் நகைக் கடைக்காரர் மிக உயரிய விலைக் கொண்ட காரை வாங்கியிருக்கின்றார். Aston Martin நிறுவனத்தின் DBX எஸ்யூவி ரக காரையே பிரபல நகைக் கடைக்காரர் வாங்கியிருக்கின்றார். பிரித்தானிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தியாளர் Aston Martin மிக கடந்த 2020ம் ஆண்டே இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 3.82 கோடிகள் ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். இதன் உயர் நிலை தேர்வையே தற்போது நகைக்கடைக்காரர் வங்கியிருக்கின்றார். அதன் விலை ரூ. 5 கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருங்க அந்த நகைக் கடைக்காரர் இவ்ளோ விலையுயர்ந்த காரை வாங்கியவர் என்று தானே கேட்குறீங்க, பிரிபல பீமா நகைக் கடையின் உரிமையாளர் கோவிந்தன், இவரே Aston Martin DBX சொகுசு காரை வாங்கியவர் ஆவார்.

தற்போது இவர் கேரளாவில் வசதித்து வருகின்றார். இந்த காரை கேரளாவில் வாங்கும் முதல் தொழிலதிபரும் இவரே ஆவார். ஆகையால், ஒட்டுமொத்த கேரள ஊடகும் இவரின் பக்கம் திரும்பியிருக்கின்றன. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலுமே நான்கு பேர் மட்டுமே Aston Martin DBX காரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒருவராகவே தற்போது நகைக் கடை உரிமையாளர் கோவிந்தன் மாறியிருக்கின்றார்.

Aston Martin DBX இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Porsche Cayenne, Bentley Bentayga, Lamborghini Urus, Rolls Royce Cullinan உள்ளிட்ட விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இத்தகைய ஓர் சிறப்பு மிக்க காரையே கோவிந்தன் தற்போது தனக்கு சொந்தமாக்கியிருக்கின்றார்.

Aston Martin DBX கருப்பு நிற காரை அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரை Aston Martin நிறுவனம் அதன் பாண்டட் அலுமினியம் கட்டமைப்பு தளத்தில் வைத்து உருவாக்கியிருக்கின்றது. இந்த தளமானது பிரத்யேகமாக எஸ்யூவி ரக கார்களை உற்பத்தி செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும்.

இந்த காரில் மிக நீளமான பட்டியல் அளவில் சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷன், 22 இன்சிலான அலாய் வீல், ஃப்ரேம்லெஸ் கதவுகள், ரூஃபில் ஸ்பாய்லர், பிரீமியம் தர லெதர், 22 இன்சிலான அலாய் வீல், 10.25 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்சிலான டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் ஆம்பிசியண்ட் மின் விளக்கு எக்கசக்க சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பார்க்க மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கம் இந்த கார் ஓர் ஐந்து இருக்கைகளை மட்டுமே கொண்ட சொகுசு காராகும். அதிக இட வசதியை இது கொண்டிருக்கின்றது. ஆகையால், சொகுசான பயண அனுபவத்திற்கு சற்றும் குறைவில்லா காராக Aston Martin DBX காட்சியளிக்கின்றது. மேலும், மிக சிறந்த எஸ்யூவி ஆகவும் இது காட்சியளிக்கிறது.

இந்த காரில் Mercedes-Benz நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 550 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட காரும் கூட. இந்த கார் 9 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதியுடன் இயங்குகிறது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 290 கிமீ ஆகும். மேலும், இந்த கார் வெறும் 4.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடை 2.2 டன்னாக இருக்கின்றது. இது போன்ற அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட Aston Martin DBX சொகுசு எஸ்யூவி காரை கேரளாவிலேயே முதல் முறையாக பீமா நகைக் கடை உரிமையாளர் கோவிந்தன் தற்போது வங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி இவரிடத்தில் இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், Rolls Royce, Bentley, Porsche மற்றும் இன்னும் பல விலையுயர்ந்த மற்றும் மிக அதிக சொகுசு வசதிகள் கொண்ட கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. மேலும், இன்னோவா போன்ற நடுநிலை கார்களும் அவரிடம் பயன்பாட்டில் இருக்கின்றன.
Source: Onmanorama


Click it and Unblock the Notifications








