Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை நிதிஷ் குமார் தொடங்கி வைத்த பின் நடந்த பரபரப்பு சம்பவம்... என்னனு தெரியுமா?
பீஹாரில் எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 புதிய எலெக்ட்ரிக் தாழ் தள பேருந்துகளின் சேவையை பீஹார் மாநில அரசு தொடங்கியுள்ளது. பீஹார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார், இந்த புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை கடந்த திங்கள் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் கூறுகையில், ''பாட்னா நகரில் நாங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. அத்துடன் கார்பன் உமிழ்வு இல்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கு நட்பாகவும் உள்ளன. எனவே சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்வது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்தோம்.
இதன்படி தற்போது 12 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார். பாட்னா-ராஜ்கிர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும், பாட்னா-முஸாஃபர்பூர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எஞ்சிய 8 எலெக்ட்ரிக் பேருந்துகளும் பாட்னாவின் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.
இதற்கிடையே எலெக்ட்ரிக் பேருந்துகள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பிறகு, பீஹார் சட்டசபை வளாகத்தில் ஒரு பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை கீழே இறக்கி விட்ட பிறகு, சட்டசபை ரவுண்டானாவில் அந்த பேருந்தின் ஓட்டுனர் யு-டர்ன் எடுக்க முயன்றார். அப்போது பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பான பகுதி என்பதால், இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சிறிய விபத்துதான். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே பீஹார் மாநிலமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் வேகமாக செயல்பட தொடங்கியுள்ளது.
காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், மத்திய அரசும், டெல்லி, குஜராத், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில் டெல்லி மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!