Just In
- 55 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாடே வேண்டாம் என கனடா ஓடிய பொறியியல் பட்டதாரி... இப்போ அவர் வாழும் வாழ்க்கையே வேற லெவல்... உத்வேகம் தரும் கதை!
மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான இந்திய இளைஞர் ஒருவர் கார் விற்பனையாளராக தனது பயணத்தைத் தொடங்கி தற்போது கனடா நாட்டின் முக்கியமான அந்தஸ்துமிக்க நபர்களில் ஒருவராக மாறியிருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பிறந்தவர் நவ் பாடியா. பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகின்றார். நாட்டில் சிக்குகுளுக்கு எதிராக கிளம்பிய கிளர்ச்சியின் காரணமாக 1984ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய இவர், கனடாவில் தஞ்சம் புகுந்தார். ஆரம்பத்தில் பணி ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினார்.
ஆனால், இப்போது கனடாவில் முக்கிய அந்தஸ்துமிக்க நபராக அவர் மாறியிருக்கின்றார். இவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சுவாரஷ்ய தகவலைதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவை விட்டு வெளியேறியபோது தனது தலைப்பாகை (டர்பன்) மற்றும் தாடி ஆகியவற்றுடன் மட்டுமே கனடாவிற்கு சென்றிருக்கின்றார், நவ் பாடியா.
ஆரம்பத்தில் தனது படிப்பிற்கு ஏற்ற வேலை அவருக்கு கிடைக்கவில்லை. இவர் ஓர் மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி ஆவார். ஆனால், இவருக்கு கனடாவில் கிடைத்ததோ கார் விற்பனையாளர் பணி. கிடைத்த பணியை அதிக காதலுடன் செய்ய தொடங்கினார், நவ் பாடியா.
ஏனெனில், ஆரம்பத்தில் இவரின் நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதன் பின்னரே கார் விற்பனையாளர் பணியை அவருக்கு கிடைத்திருக்கின்றது. மிக சிறிய விற்பனையகத்திலேயே இவருக்கு விற்பனையாளர் பணி கிடைத்தது.
இந்த நிலையில், வேலைக்கு சேர்ந்த 90 நாட்களிலேயே நவ் பாடியா 127 கார்களை தனது பேச்சு திறமையால் விற்பனைச் செய்து, ஷோரூம் நிர்வாகத்தையே திணறிக்கடிச் செய்தார். இதனால் மெய்சிலிர்த்துபோன ஷோரூம் நிர்வாகும் அவருக்கு பதவி உயர்வை உடனடியாக வழங்கி அழகு பார்த்தது.
அவரை நிறுவனத்தின் பொது மேலாளராக நியமித்தது. இந்த உடனடி பதவி உயர்விற்கு அவர் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையே காரணம் ஆகும். இன்று வரையிலும் இவரின் சாதனையை முறியடிக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இதுபோன்று கார் விற்பனையில் பல சாதனைகளை அவர் செய்திருக்கின்றார்.
ஆகையால், அடுத்தடுத்து பதவி உயர்வுகளை மட்டுமே அவர் சந்தித்தார். அதேசமயம், இவரின் வளர்ச்சியே மிக விரைவில் நவ் பாடியாவிற்கு லேசான இன்னல்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றது. ஏற்கனவே பணிபுரிந்த சிலருக்கு நவ் பாடின் வளர்ச்சி பெரும் உருத்தலாக அமைந்தது. ஆகையால், அவர்கள் ஷோரூம் நிர்வாகத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.
இருப்பினும், மனம் தளராத அவர் புதிய பணியாளர்களை நியமித்து நிர்வாகத்தை மேலோங்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் விளைவாக கனடாவின் மிகப் பெரிய விற்பனையாளரிடத்தில் இருந்து உயர் பதவிக்கான அழைப்பு கிடைத்தது. மேலும், மிக விரைவில் கனடா ஹூண்டாய் விற்பனையகத்தின் சிஇஓ-வாகவும் அவர் உயர்ந்தார். இவ்வாறு, புகழின் உச்சத்தையே அவர் அடைந்துள்ளார்.
நப் பாடியா, கார் விற்பனை தொழிலில் மட்டுமில்லைங்க கூடைப்பந்தாட்ட போட்டியிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். குறிப்பாக, இவர் கனடா நாட்டின் டொராண்டோ ராப்டர்கள் கூடைப்பந்தாட்ட அணியின் மிக தீவிரமான ரசிகராக இருந்து வருகின்றார். 1995ம் ஆண்டில் இருந்து இந்த அணியை மட்டுமே அவர் ஆதரித்து வருகின்றார்.
அந்த அணி வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியைச் சந்தித்தாலும் சரி அவர்களை ஆதரிப்பதை மட்டுமே இவர் ஒரே குறிக்கோளாக வைத்திருக்கின்றார். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இவரின் ஆதரிப்பு என்பது மிக தனித்துவமானது என ராப்டர்கள் கூடைப்பந்தாட்ட அணியினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்பாட்டிற்காக அவருக்கு பல்வேறு விருதுகளை அந்த அணியின் நிர்வாகம் வழங்கியிருக்கின்றது.
மேலும், கார் விற்பனையாளரை புகழ்விக்கும் வகையில் பல்வேறு அங்கீகாரங்களை நிர்வாகம் வழங்கியிருக்கின்றது. சூப்பர் ஃபேன் மற்றும் சாம்பியன்ஷிப் மோதிரம் போன்றவற்றை அது வழங்கியிருக்கின்றது. தொடர்ந்து, என்பிஏ அமைப்பின் வாழ்த்தரங்கம் (Hall Of Fame) என்ற பட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது.
ராப்டர்கள் கூடைப்பந்தாட்ட அணியினரின் விளையாட்டை தான் மட்டுமின்றி சில ஏழை சிறுவர்கள் காண்பதற்கான வாய்ப்புகளையும் நவ் பாடியா உருவாக்கி வருகின்றார். இதற்காக ஒவ்வொரு பருவத்தின்போதும் அவர் 300,000 அமெரிக்க டாலர்களைச் செலவிடுவதாக கூறப்படுகின்றது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!