Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாடிக்கையாளர் சேவைக்காக சியட் டயர்ஸின் சூப்பர் அறிவிப்பு!
சியட் டயர் விற்பனை மையங்கள் இனி முழுமையான வாடிக்கையாளர் சேவை மையங்களாக செயல்படும் என்று சியட் டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயர் உற்பத்தியில் பிரபலமாக விளங்கும் சியட் நிறுவனம் வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தனது டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது டயர் விற்பனை மையங்கள் அனைத்தும் இனி முழுமையான வாடிக்கையாளர் சேவை மையங்களாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 200 அங்கீகரிக்கப்பட்ட நேரடி டயர் விற்பனை மையங்களுடன் செயல்பட்டு வருகிறது சியட் நிறுவனம். இந்த மையங்களில் டயர் விற்பனை, வீல் பேலன்சிங், வீல் அலைன்மென்ட் உள்ளிட்ட பணிகள் செய்து தரப்படுகின்றன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் விதத்தில், இந்த டயர் விற்பனை மையங்களில் இனி வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்படும் விதத்தில் சேவை மையங்களாக செயல்படும்.

டயர்களை மாற்றிக் கொள்வதற்கும், வாடிக்கையாளர்களை புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த 200 மையங்களும் இனி செயல்படும். மேலும், டயர்களுக்கான வாரண்டி பதிவு, கார் உரிமையாளர்கள் கூடுதல் சிறப்பு வாரண்டி உள்ளிட்டவற்ரை பெறுவதற்கும் இங்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சியட் ஷாப் என்ற பெயரில் இந்த நேரடி விற்பனை மையங்கள் செயல்பட உள்ளன. இந்த விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும். இதன்மூலமாக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும் என்று சியட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மன நிறைவுடன் டயர் வாங்கும் நடைமுறையை மேற்கொள்ளும் விதத்தில் இந்த சியட் ஷாப் மையங்கள் செயல்படும். மேலும், டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிபந்தனையில்லாத வாரண்டி திட்டத்தையும் பெற முடியும்.

சேவையில் ஏதெனும் குறைபாடு இருந்தால், இந்த 200 மையங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் உடனடியாக தீர்வு பெற முடியும்," என்று சியட் டயர்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி அமித் டோலனி தெரிவித்துள்ளார்.