Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அனைத்து மாநில அதிகாரிகள் மீட்டிங்கில் தமிழகத்தை பாராட்டிய மத்திய சுகாராத்துறை... தொடர் புகழ்ச்சியில் தமிழகம்!
சென்னையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கால் டாக்சி சேவையை மத்திய சுகாதாரத்துறை பாராட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் பற்றக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. இது குறிப்பிட்டதுறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசுகளுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி வருகின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையும் வகையில் சென்னையில் கால் டாக்சி வாகனங்கள் தற்காலிகமாக ஆம்புலன்ஸ்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் 250 கால் டாக்சி வாகனங்கள் ஆக்சிஜன் வசதிக் கொண்ட ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அதன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அண்மையில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெரிவித்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. முழு ஊரடங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் வைரஸ் தொற்றின் பரவல் வேகம் கணிசமாக குறைந்திருக்கின்றது.
இருப்பினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதில், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை பெரும் தலைவலியை அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையைச் சமாளிக்கும் விதமாக குறிப்பிட்ட சில மாநில அரசுகள் பேருந்துகளை தற்காலிக ஆக்சிஜன் வாகனங்களாக மாற்றின. அதேசமயம், சில தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களும் அரசுகளுக்கு உதவி கரம் நீட்டும் விதமாக தங்களின் வாகனங்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றி வழங்கின.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஆம்புலன்ஸ்களின் அதிகப்படியான தேவையை உணர்ந்து உடனடியாக கால் டாக்சி வாகனங்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. தமிழக அரசின் இந்த அதிரடி முயற்சிக்குதான் தற்போது மத்திய சுகாதாரத்துறை அதன் பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றது.
மேலும், இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசுகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அது கூறியிருக்கின்றது. இதேபோன்று மிக சமீபத்தில், "சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழ்நாடுதான் பெஸ்ட், இதில் இந்தியாவே தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும்" என அண்மையில் போக்குவரத்து - தெற்காசியா, உலக வங்கியின் பயிற்சி மேலாளர் ஷோமிக் ராஜ் மெஹந்திராட்டா கூறியிருந்தார்.
இவ்வாறு பல்வேறு விஷயங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலைப்பாட்டையே தற்போதைய கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழகம் கடைபிடித்து வருகின்றது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!