தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கிய எம்பி-யின் கார்! இப்போவாது வாகன ஓட்டிகளின் சிரமம் புரியுதா மிஸ்டர் எம்பி!!
தண்ணீர் நிறைந்த பாதையில் பாராளுமன்ற உறுப்பினரின் கார் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. எப்படி மீட்கப்பட்டது, எந்த வாகனம் உதவியது என்பது பற்றிய விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவ மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. அண்மையில் மும்பையில் பெய்த மழை அந்த நகரத்தை ஒரு கை பார்த்துவிட்டு சென்றது. இதனால், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூழ்கடிக்கும் வகையில் நகரத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளக் காடாக மாறியது.

இந்தமாதிரியான சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கார் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிக சிறிய கிராமம் தேவி. இந்த கிராமத்தின் வழியாக சென்றுக் கொண்டிருந்த போதே எம்பி-இன் கார் சிக்கியிருக்கின்றது.

சிந்த்வாரா எம்பியான நகுல் நாத் காரே தண்ணீருக்கு மத்தியில் சிக்கியிருக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், பலர் இப்போதாவது எங்களின் வேதனை எம்பி-க்கு புரியும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த பாதையில் ஓர் மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கையை தேவி கிராம மக்கள் வைத்து வந்திருக்கின்றனர். இருப்பினும், அரசு சார்பில் இதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நகுல் நாத் உடைய டொயோட்டா இன்னாவா எம்பிவி கார் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கியிருக்கின்றது. இயக்கமற்று நின்ற சொகுசு காரை காவலர்களின் கார் கொண்டு மஹிந்திரா கார் கொண்டு அகற்றப்பட்டது.

டொயோட்டா இன்னோவாவை மீட்க உதவியது மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ எக்ஸ்எல் மாடலாகும். ராணுவம், காவல்துறை என அரசின் பல்வேறு துறைகளில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிக சிறந்த திறன் கொண்ட வாகனம் என்பதனால் அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாக பொலிரோ ரக கார்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது சூப்பர் திறனை வெளிக்காட்டும் வகையில் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கிய டொயோட்டா இன்னோவாவை மீட்டு, மஹிந்திரா பொலிரோ உதவியிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மீட்பு பணியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் மிக சிரமமான சூழ்நிலையில் சிக்கியிருந்த வாகனங்களைகூட மஹிந்திரா கார்கள் அசால்டாக மீட்டெடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Source:Free Press Journal
"அரசியல்வாதியின் காரை மீட்க உடனே போலீஸ் வாகனங்கள் உதவின. ஆனால், சரியான பாதை இல்லாமல் தினந்தோறும் சிக்கலை சந்திக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கு உதவ யாரும் இருப்பதில்லை. இனியாவது எம்பி நகுல் நாத் எங்களின் நிலையை உணர்ந்து இந்த பாதையில் ஓர் பாலம் அமைப்பார்" என கிராம மக்கள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








