தேசத்திற்கு மட்டுமல்ல மற்றொன்றிற்கும் தலைநகராக மாறிய டெல்லி! என்ன அது தெரியுமா? நிச்சயமா நம்பவே மாட்டீங்க!
தலைநகர் டெல்லியில் அதிகளவில் வாகன திருட்டுகள் அரங்கேறுவதாக அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசத்தின் தலைநகரான டெல்லியில் வாகன திருட்டுகள் அதிகளவில் அரங்கேறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நகரத்தில் செல்போன் திருட்டைவிட அதிகளவில் வாகன திருட்டே அதிகளவில் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

டெல்லி காவல்துறையிடம் இருந்து கிடைத்திருக்கும் தரவுகளின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டிற்குள்ளாக 3.07 லட்சம் வாகனங்கள் திருடப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்திருக்கின்றது.

குறிப்பாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த வேலையில் அதிகளவில் வாகனங்கள் களவு போயிருப்பதாகவும் டெல்லி காவல்துறையான அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி தொடங்கி 30ம் தேதிக்குள்ளாக மிக உச்சபட்சமாக 1,243 வாகனங்கள் திருடப்பட்டிருக்கின்றது.

இது சராசரியாக நாள் ஒன்றிற்கு 83 வாகனங்களுக்கு திருடப்பட்டதற்கு சமம் ஆகும். இதனால், டெல்லி தேசத்திற்கு மட்டுமின்றி வாகன திருட்டிற்கும் தலைநகரமாக மாறியிருப்பதாக நகர வாசிகள் விமர்சித்திருக்கின்றனர். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்பட்டதாக தேசிய குற்றப் பதிவேட்டில் இருந்து தரவுகள் தெரிவிக்கின்றன.

பிற பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது, டெல்லி வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லிக்கு அடுத்தபடியாக கர்நாடகா தலைநகரம் பெங்களூருவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு வாகனம் திருடப்படுகின்றன.

மும்பையில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு வாகனம் திருடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு வாகன திருட்டு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. முக்கியமாக டெல்லியில் இது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இது பல திருட்டு வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே காட்சியளிக்கின்றது. 2020ம் ஆண்டில் 11.94 சதவீதம் வாகனங்களே மீட்கப்பட்டிருக்கின்றன. இதில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருசக்கர வாகன 72 சதவீதம் வரை மீட்கப்பட்டிருக்கின்றன.

பல வாகனங்கள் மீட்கப்படாமல் இருப்பதற்கு திருடர்கள் கையாண்டிருக்கும் புதிய நுட்பங்களே காரணமாக இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாகன கொள்ளையர்கள் போலீஸாரின் கண்களில் சிக்கமால் தப்பி வருகின்றனர்.

அந்தவகையில், நீண்ட நாளாக தப்பி வந்த ஓர் கார் கொள்ளையன் சமீபத்தில் போலீஸாரிடம் சிக்கினார். அந்த ஒற்றை நபரிடத்தில் மட்டும் 200க்கும் அதிகமான வாகனங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சம்பவம் குஜராத் மாநிலம் சூரத்தில் அரங்கேறியிருந்தது.

இதுபோன்று வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இரவு, ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் பாதுகாப்பற்ற இடங்களிலேயே அரங்கேறியிருக்கின்றன. ஆகையால், இதுபோன்று திருட்டு சம்பவங்களில் இருந்து வாகனங்களைக் காக்க நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரே வழி பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது மட்டுமே ஆகும்.

Source: CNBCTV18
முறையான பார்க்கிங் அல்லது சிசிடிவி கேமிராக்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால், அது தொலைந்தாலும் வெகு விரைவில் நம்மால் கண்டுபிடிக்க முடியும். இத்துடன், வாகனங்களில் ஜிபிஎஸ் போன்ற சில பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாகவும் அவற்றை உடனக்குடன் கண்டுபிடிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








