Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹெல்மெட், மாஸ்க் இல்ல... இதுவேற... இனிமேல் இது இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் குடுக்க மாட்டாங்க!
காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக விரைவில் பல்வேறு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டிற்குள், மொத்த வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 25 சதவீதமாக இருக்க வேண்டும் என அம்மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக, இ-காமர்ஸ் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கேப் நிறுவனங்கள் ஆகியவற்றிடம், முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும்படி டெல்லி மாநில அரசு கேட்டு கொள்ளவுள்ளது. அதேபோல் பியூசி சர்டிபிகேட் (PUC - Pollution Under Control Certificate) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது எனவும் பெட்ரோல் பங்க் நிர்வாகங்களிடமும் டெல்லி அரசு கேட்டு கொள்ளவுள்ளது.
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த அரசு அதிகாரிகள் கூறுகையில், ''காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக 2 முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம். முதலாவதாக ஓலா, உபேர், ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களிடம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும்படி கேட்டு கொள்ளவுள்ளோம்.
இவர்களின் வாகனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. எனவே இந்த நிறுவனங்கள் முற்றிலுமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறினால், காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அதேபோல் பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் நடப்பு வாரத்திலேயே பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது என்ற உத்தரவை எளிமையாக அமல்படுத்தலாம். ஆனால் ஓலா, உபேர், ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களை உடனடியாக முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைப்பது சற்று சிரமமான விஷயம்.
எனவே இதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''படிப்படியாகதான் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும்'' என்றனர். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் அமைப்பதற்கும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இதன்படி வரும் 2024ம் ஆண்டிற்குள் மொத்த வாகன விற்பனையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 25 சதவீதம் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக வரும் மாதங்களில் டெல்லி அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்கள் மீது டெல்லி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் சுமார் 500 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுவினர், பெட்ரோல் பங்க்குகளில், வாகனங்களின் பியூசி சர்டிபிகேட்களை பரிசோதிக்கும் பணியை செய்தனர்.
முறையான பியூசி சர்டிபிகேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகளால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். அல்லது சில சமயங்களில் இரண்டு தண்டனைகளையும் சேர்த்து விதிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. அதே நேரத்தில் உலகில் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் டெல்லி உள்ளது. எனவே டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து கொண்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் வரும் காலங்களில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என நம்பலாம். எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!