இணைய வாசிகளின் மனதை கவர்ந்த நாய்... இப்படி ஒரு சம்பவத்தை செஞ்சா யாருக்கு இதை பிடிக்காது! வைரல் வீடியோ!
இணைய வாசிகளின் மனதை வளர்ப்பு நாய் ஒன்று கவர்ந்திருக்கின்றது. அது என்ன செய்தது, என்ன காரணத்திற்காக இணைய வாசிகள் அந்த நாயைக் கொண்டாடி வருகின்றனர் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குடும்பத்தில் ஒருவராக செல்லப் பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிலரது வீட்டில் இவை பிள்ளைகளைப் போல் வளர்க்கப்படுவதைக்கூட நம்மால் பார்க்க முடிகின்றது. அதேபோல் அவையும் அன்பையும், பாசத்தையும் தங்களின் எஜமானவர்களுக்கு வாரி வழங்குவதில் தவறுவதில்லை.

எனவேதான் சிலரது வீட்டில் மனிதர்களைக் காட்டிலும் செல்லப் பிராணிகள் மிக அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தளவிற்கு மனிதர்கள் செல்லப் பிராணிகள் மீது குறிப்பாக நாய்கள் அதிகம் பாசமும், அக்கறையும் காட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் அரங்கேறியிருக்கும் ஓர் சம்பவம் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். பெரு வெள்ளத்தில் சிக்கிய காரை நகர்த்தத முடியாமல் திணறிய தனது எஜமானருக்கு நாய் ஒன்று உதவி செய்திருக்கின்றது. இந்த சம்பவம்குறித்த காட்சிகளே தற்போது இணையத்தில் வைரலாகி மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றது.

குறிப்பாக, செல்லப் பிராணிகளை அதிகம் வளர்ப்போர் மத்தியில் இச்சம்பவம் பெருத்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவமானது ஸ்காட்லாந்து பகுதியில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகளவில் பெய்ய தொடங்கியிருக்கின்றன.

அந்தவகையில், மிக சமீபத்தில் சீனாவை கடும் மழை புரட்டிப் போட்டு சென்றது. இதுபோன்று ஓர் மழை வெள்ளத்திலேயே ஸ்காட்லாந்து தற்போது சிக்கியிருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது குடும்பத்துடன் காரில் வந்த ஓர் நபரே மழை வெள்ளத்தில் காரை ஓட்ட முடியாமல் சிக்கியிருக்கின்றார்.

கார் நகர முடியாமல் நீண்ட நேரம் திணறியதை அடுத்து அதன் உரிமையாளர் வெளியில் இறங்கி காரை தள்ளும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருடன் காரில் வந்த அவரது வளர்ப்பு நாய் நீண்ட நேரமாக போராடிக் கொண்டிருந்த உரிமையாளருக்கு உதவி செய்ய தொடங்கியது. அதாவது, அந்நபர் காரைத் தள்ள கடும் சிரமம் சந்தித்ததை அடுத்து நாய் இரு கைகளை (முன்னங் கால்களை)க் கொண்டு காரை தள்ள உதவியது.

முன்னதாக காரில் இருந்து இறங்கிய அந்த நாய் சிறிது அங்கும்-இங்குமாக நீந்திக் கொண்டிருந்தது. இதையடுத்து தன் உரிமையாளர் காரை தள்ள சிரமப்படுவதை அறிந்து அதுவும் தள்ள உதவி செய்தது. காரை தள்ளியது ஓர் பெண் என கூறப்படுகின்றது. மேலும், காரில் அமர்ந்திருந்ததும் ஓர் பெண்ணாவார்.

இவர்களுக்கு துணையாகவே அந்த நாய் காரில் வந்திருக்கின்றது. துணையாக மட்டுமின்றி தோல் கொடுப்பான் தோழன் போன்று அந்த நேரத்தில் தன்னால் இயலாத ஓர் செயலை செய்து பலரின் மனதைக் கவர்ந்திருக்கின்றது. இந்த செயலுக்காகவே பலர் அந்த நாயை தற்போது பாராட்டி வருகின்றனர்.

சம்பவம் குறித்த வீடியோவை கில்லீஸ் எனும் ஓர் நபர் அவரது மொட்டை மாடியில் இருந்து செல்போன் வாயிலாக காட்சிப்படுத்தியிருக்கின்றார். அவர் மழை வெள்ளத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியதாக கூறி வீடியோவை தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த காணொளியை பகிர்ந்த ஒரு சில மணி நேரத்திலேய 5 ஆயிரத்திற்கும் பகிர்ந்திருக்கின்றனர். மேலும் பல ஆயிரக் கணக்கானோர் லைக்ஸ்களைக் குவித்தும் வருகின்றனர். ஆகையால், இணையத்தின் ஹீரோவாகவே அந்த நாய் மாறியிருக்கின்றது. நாய்கள் இதுபோன்று தங்களின் எஜமானர்களுக்கு உற்ற நண்பனாக செயல்படுவது முதல் முறையல்ல.

இந்தியாவில்கூட இதுமாதிரியான நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. பாம்பிடம் இருந்து குழந்தையை பாதுகாத்தது, திருடனிடம் இருந்து பெண்ணை பாதுகாத்தது என பிரம்மிப்பை ஏற்படுத்தும் செயல்களை அவை செய்திருக்கின்றன. இதுபோன்ற செயல்களில் அவை ஈடுபடுகின்ற காரணத்தினால் பலர் நாய் என்பதற்கு பதிலாக கடவுள் (Dog-God) என அழைத்து வருகின்றனர்.
மனிதர்கள் நாய்கள் மீது வைத்திருக்கும் இந்த பார்வையை உறுதி செய்யும் வகையிலேயே தனது எஜமானி பெண்ணுக்கு தன்னால் செய்ய முடியாத ஓர் காரியத்தை செய்ய அது களமிறங்கியிருக்கின்றது. இந்த நிகழ்வு அநேகரின் மனதில் இனம் புரியாத ஈர்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








