தமிழகத்தில் ஓர் சாதனை பெண்! ஆண்களுக்கு சவால் விடும் ஈஸ்வரி! முடியாது என ஒதுங்கும் பெண்களுக்கு ஓர் முன்னுதாரணம்
கார்களில் ஆறு ஏர் பேக்குகளை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆண்களுக்கு எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல என்பதை பெண்கள் தங்களின் சாதனைகளின் வாயிலாக நிரூபிக்க தொடங்கியிருக்கின்றனர். பல துறைகளில் தங்களின் வருகையை அவர்கள் பதிவு செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், கோவையை ஓர் சேர்ந்த இளம்பெண் ஆண்களுக்கு சவால் விடும் வகையில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பணியை மேற்கொண்டு வருவது தகவல் வெளியாகியிருக்கின்றன.

பெண்கள் செய்ய தயங்கும், குறிப்பாக, என்னால் முடியாது என ஒதுங்குவோர்க்கு முன்னுதாரணமாக அப்பெண் இப்பணியில் களமிறங்கியிருக்கின்றார். இதன் வாயிலாக நல்ல வருமானத்தையும் அவர் ஈட்டத் தொடங்கியிருக்கின்றார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி.

அங்காள ஈஸ்வரியின் படம்.
இவரே பொக்லைன் இயந்திரத்தை அசத்தல் பெண் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரு சிண்டிகேட் நிறுவனம் மஹேந்திரா நிறுவனம் பெண்களுக்கு பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பயிற்சியை அளிக்க முடிவு செய்தது. இந்த பயிற்சி பட்டறையில் சேர கணிசமான பெண்கள் முன் வந்திருக்கின்றனர்.

Source: Polimernews
அதில் ஒருவரே தற்போது பொக்லைன் இயந்திரத்தை இயக்கி அசத்தும் அங்காள ஈஸ்வரி. முதல் கட்ட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட இவருக்கு பொக்லைன் இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது பற்றிய அனைத்து கற்பித்தலையும் தனியார் நிறுவனங்கள் வழங்கியிருக்கின்றன.

இத்துடன், இயந்திரத்தை இயக்குவதற்கான அனுமதியையும் அவர்களே பெற்று அங்காள ஈஸ்வரிக்கு வழங்கியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது அங்காள ஈஸ்வரி கோவையில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்மூலம் நல்ல வருமானத்தையும் அழர் ஈட்ட தொடங்கியிருக்கின்றார். இந்த செயலின் வாயிலாக தமிழகத்தில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் முதல் பெண்ணாக கோவையைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி மாறியிருக்கின்றார். இது அப்பெண்ணுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

மிக சமீபத்தில் கேரளாவில் ஓர் இளம்பெண் தனியாக கனரக வாகனங்களை இயக்குவதைப் போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்திலேயே ஓர் சிங்க பெண் இருப்பதாக வெளி வந்திருக்கும் தகவல் தமிழக வாசிகளை, குறிப்பாக, கோவை வாசிகளை பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.

ஆண்கள் மட்டுமே பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தநிலையில், எங்களால் எதையும் சாதிக்க முடியும் என ஒட்டு மொத்த பெண்கள் பாலினமும் கூறும் வகையில் அங்காள ஈஸ்வரியின் செயல் அமைந்துள்ளது.

ஆகையால், பெண்களைச் சார்ந்து இயங்கும் அமைப்புகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வரும் தனியார் அமைப்புகள் ஆகியவை சமூக வலைதளங்கள் வாயிலாக கோவைப் பெண் அங்காள ஈஸ்வரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொக்லைன் இயந்திரங்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதிக முன் அனுபவம் கொண்ட ஆண்கள் பலரே பொக்லைன் இயந்திரத்தை இயக்குவது பெரும் சவாலானது என தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் அங்காள ஈஸ்வரி துணிச்சலாக பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் தொழிலில் களமிறங்கியிருப்பது பாராட்டுக்கு உரியதாக அமைந்துள்ளது.

தனியார் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் அங்காள ஈஸ்வரி இந்த தொழிலில் துணிச்சலுடன் களமிறங்கியிருக்கின்றார். சாரு சிண்டிகேட் நிறுவனம் மஹேந்திரா நிறுவனம் போலவே நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் பெண்களை முன்னேற்றும் சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








