Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஃபோர்டு கார்களின் விலை அதிகரிப்பு... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு!
உற்பத்தி செலவீனத்தை கருத்தில்கொண்டு, ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்ற விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக எழுந்த அசாதாரண சூழலால், கார் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றது. கார் விற்பனையை அதிகரிப்பதற்காக பல யுக்திகளை கார் நிறுவனங்கள் கையாண்டன. மேலும், கார் விலையையும் உயர்த்தவில்லை.
இந்த சூழலில், இந்த ஆண்டு துவக்கம் முதலே கார் விற்பனை இயல்பு நிலைக்கு வந்ததால், கார் நிறுவனங்கள் ஜனவரியில் விலை உயர்வு நடவடிக்கையை எடுத்தன. இதைத்தொடர்ந்து, காலாண்டு முடிவுற்ற நிலையில், ஏப்ரலிலும் சில நிறுவனங்கள் கார் விலையை அதிகரித்துள்ளன.
அந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதிகபட்சமாக ரூ.80,000 வரை ஃபோர்டு கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஆகிய அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. உற்பத்தி செலவீனம் மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
ஃபோர்டு ஃபிகோ கார்களின் விலை ரூ.18,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு ஃபிகோ கார் இனி ரூ.5.82 லட்சம் முதல் ரூ.8.37 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.
ஃபோர்டு ஆஸ்பயர் கார் விலை ரூ.3,000 வரையிலும், ஃப்ரீஸ்டைல் விலை ரூ.18,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் விலை ரூ.20,000 வரையிலும், எண்டெவர் எஸ்யூவி விலை ரூ.80,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், விலை உயர்வு குறித்த முழுமையான விபரங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்டு டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.