Just In
- 12 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 16 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!
எண்டேவியரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான டைட்டானியம் 4X2-இன் விற்பனையை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
ஃபோர்டு எண்டேவியர் மாடல் டைட்டானியம் 4x2, டைட்டானியம்+ 4X2, டைட்டானியம்+ 4X4, ஸ்போர்ட் 4X4 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதில் தற்போது டைட்டானியம் 4X2 வேரியண்ட்டின் விற்பனையை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதனால் இனி மற்ற மூன்று வேரியண்ட்களில் தான் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. மேலும் இதனால் எண்டேவியரின் ஆரம்ப விலை ரூ.33.80 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த அமெரிக்க கார் பிராண்டின் ப்ரீமியம் எஸ்யூவி மாடலாக விளங்கும் எண்டேவியர் 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் ஒரே ஒரு 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டுமே தேர்வாக வழங்கப்படுகிறது. இதனுடன் பிராண்டின் ‘செலக்ட்-ஷிஃப்ட்' தொழிற்நுட்பமும் வழங்கப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டை பொறுத்து என்ஜினின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கோ அல்லது அனைத்து சக்கரங்களுக்கோ வழங்குகிறது.
இவற்றுடன் மணல், பனி/சகதி, பாறை என மூன்று விதமான பாதை மேலான்மை அமைப்பும் வழங்கப்படுகிறது. எண்டேவியரில் மற்ற ஓட்டுனர் உதவி அம்சங்களாக ஹில் லாஞ்ச் உதவி, டிராக்ஷன் கண்ட்ரோல், மலைப்பாதைகளில் ஏறுவதற்கு தேவையான கண்ட்ரோல், வாகனம் சுழற்றலை குறைத்தல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.
வெளிப்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டிருக்கும் இந்த ஃபோர்டு காரில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு நிற க்ரில், ஸ்கஃப் தட்டுகள், மேற்கூரை தண்டவாளங்கள், பக்கவாட்டு படிக்கட்டுகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.
உட்புறத்தில் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, பனோராமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், மடக்கக்கூடிய மூன்றாம் இருக்கை வரிசை, சாவியில்லா நுழைவு மற்றும் பொத்தான் ஸ்டார்ட் முதலியவற்றை எண்டேவியர் ஏற்கிறது.
இவை காட்டிலும் முக்கிய அம்சமாக ‘ஃபோர்டுபாஸ்' என்ற ஃபோர்டின் இணைப்பு தொழிற்நுட்பம் இந்த காரில் வழங்கப்படுகிறது. இது ஓட்டுனர் தனது எண்டேவியர் காரை தொலைவில் இருந்து கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. மேலும் வாகனத்தை பற்றிய ஏகப்பட்ட தகவல்களை வழங்குகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏழு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வேக லிமிட் உடன் க்ரூஸ் கண்ட்ரோல், அவசரகால உதவி, ஆக்டிவ் பார்க்கிங் வழிக்காட்டுதல் உடன் பின்பக்கத்தை காட்டும் கேமிரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் செமி-ஆட்டோமேட்டிக் பார்க் உதவியை எண்டேவியர் ஏற்கிறது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு