Just In
- 21 min ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 3 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 4 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 5 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
உதிரிபாக சப்ளை பிரச்னையால், சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையிலும் கார் ஆலைகள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மற்றும் சனந்த் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.
கார் உற்பத்திக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகத்தின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கார் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கார் ஆலையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உதிரிபாக சப்ளையில் இருக்கும் தடங்கலை மனதில் வைத்து, வரும் 24ந் தேதி வரை சென்னை ஆலையில் உற்பத்தியை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சனந்த் ஆலையிலும் கூட உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. செமி கன்டக்டர் உதிரிபாகங்கள் சப்ளையில் இருக்கும் பிரச்னையால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியில் தொடர்ந்து சில மாதங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது.
இதனால், புதிய ஃபோர்டு கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்று அதிகரிக்கும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சப்ளை செய்வதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும்.
நடப்பு காலாண்டில் சென்னை மற்றும் சனந்த் கார் ஆலைகளில் கார் உற்பத்தி 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருப்பதாகம் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 7,000 கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 65,000 கார்களை ஃபோர்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.