Just In
- 6 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 50 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- Movies Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!
குஜராத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) நிறுவனத்துடனான டெண்டர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குஜராத் மாநில அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு, 10 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வழங்கியுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த அரசு அதிகாரிகள், ஒற்றுமையின் சிலையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்தியாவின் சுதந்திர தினம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. அப்போது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. குஜராத் மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை குஜராத் மாநில அரசு வழங்குகிறது. நேற்று முன் தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் மிகவும் குறைவு. இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அம்மாநில அரசு வழங்கி வரும் மானியமே காரணம்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 30.2 kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஇஎஸ்எல் நிறுவனம் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உற்பத்தியாளர்களிடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் இஇஎஸ்எல் நிறுவனம் அவற்றை அரசு துறைகள் மற்றும் கேப் நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது.
தற்போது குஜராத் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தயாரிப்புகள் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டுள்ளன.
ஆனால் இதில் சுமார் 70 சதவீத சந்தை பங்கை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கொண்டுள்ளது. இந்திய சாலைகளில் தற்போதைய நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இயங்கி கொண்டுள்ளன. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதை வைத்து பார்க்கும்போது, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனை என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் கிடையாது. எனினும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு மாற்றாக இதனை குறிப்பிடலாம்.
ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இதை தொடர்ந்து அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஆனால் இதன் அறிமுகம் எப்போது? என்ற உறுதியான தகவல் எதுவும் தற்போதைக்கு நமக்கு கிடைக்கவில்லை.
அதேபோல் மஹிந்திரா நிறுவனமும் தனது எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் வரும் காலங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது வேண்டுமானால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 என இரண்டு கார்களின் ஐசி இன்ஜின் மாடல்களும் மிகவும் பாதுகாப்பானவை.
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்த இரண்டு கார்களும் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பை ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன. இந்தியாவை சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங்களும் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தரமான கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்பதே உண்மை. ஆனால் வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாம் நம்பலாம்.