Just In
- 23 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 24 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட இது முன்னாடியே தெரியாம போச்சே! ஏசியை ஆன் செய்யாமலே காரை குளிர்ச்சியாக வைக்கலாம்... எப்படி? இதோ எளிய வழிகள்!
கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் காரில் ஏசியை போடாமலே எப்படி குளிர்ச்சியாக வைத்திருக்கலாம் என்பது பற்றிய குறிப்புகளை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

கோடை வெயில் இப்போதே வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. கத்திரி வெயில் ஆரம்பிக்க இன்னும் பல நாட்கள் இருக்கின்ற சூழ்நிலையில் இப்போதே அனல் காற்று மக்களை சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், பலர் மதிய வேலையில் வெளியில் செல்லவதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. இதிலிருந்து கார் வைத்திருப்பவர்களால் மட்டுமே ஓரளவிற்கு தப்பிக்க முடியும். ஆனால், வாட்டி வதைத்தெடுக்கும் வெயிலில் காரில் பயணிப்பதும் சிரமம் என்கின்றனர் நகரவாசிகள் பலர்.

அதிக வெயில் வீசுவதாலும், சாலையில் இருந்த மரங்கள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதன் காரணத்தினாலும் உச்சி வெயிலில் பயணிப்பது மிகவும் சிரமம் என்கின்றனர். ஏசி இருந்தாலும் சூரிய ஒளி படும் பகுதி கடும் சூடாகவும், கார் ஓட்டுவதை பெரும் சவாலானதாகவும் மாற்றுவதாக புலம்புகின்றனர்.

குறிப்பாக, வெயில் காலத்தில் காரை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் பயன்படுத்துவது மிக மிக சிரமம் என்கின்றனர். இவ்வாறு புலம்புவர்களுக்கு பயனளிக்கும் வகையில் குறிப்பிட்ட சில டிப்ஸ்களை இப்பதிவில் வழங்கியுள்ளோம். இதன் மூலம், காரில் ஏசியை ஆன் செய்யாமலே கேபினைக் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். இதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு 1 : விண்ட்ஷீல்ட் / ஜன்னல்கள் மறைப்பான்
நிழல் அல்லாத பார்க்கிங் இடங்களில் கார்களை நிறுத்தும்போது காரின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் சூரிய புகாத வண்ணம் திரைகளைப் போர்த்துவது சிறந்தது. இதன் மூலம், சூரிய ஒளி உட்புகுவதை முழுமையாக தவிர்க்க முடியும். இத்துடன், காரின் கேபின் வெப்பமாவதையும் நம்மால் குறைக்க முடியும்.

ஆகையால், ஏசியை ஆன் செய்யாமலே காரில் லேசான குளிர்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான சன்ஷேட் மற்றும் விஷர்கள் சந்தையில் மிக தாரளமாக மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வெயிலால் நேரிடும் புதுப்பொலிவு இழப்பையும் தடுக்க முடியும்.

குறிப்பு 2 : டேஷ்போர்டு கவர்
காரின் ஜன்னல் மற்றும் விண்ட்ஷீல்டை மட்டுமில்லைங் டேஷ்போர்டு பகுதியையும் ஓர் போர்வை மூலம் மூடுவது மிக சிறந்தது. இது வெப்பத்தை மிக சுலபமாக கடத்தும் என்பதால் வெயிலில் அதிக நேரம் கார் நிற்கும் விரைவில் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு உமிழும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் காட்டன் துணி அல்லது பிற வெப்பம் கடத்தா போர்வைக் கொண்டு மூடுவது சிறந்தது. இதன்மூலம் வெப்பத்தைக் குறைத்து கேபினைக் குளிர்ச்சியாக மாற்ற முடியும்.

குறிப்பு 3 : ஸ்டியரிங் வீல்:
வாகனத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஸ்டியரிங் வீலையும் சூரிய ஒளி புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். இதுவும், மிக விரைவில் வெப்பத்தைக் கடத்தக்கூடிய ஓர் பாகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்டியரிங் வீல் வெப்பமாவதால் அதனைக் கையாள்வதில் சிரமம் ஏற்படும். இதனைத் தவிர்க்க ஸ்டியரிங் வீலை கவர் கொண்டு போர்த்துவது சிறந்தது.

குறிப்பு 4 : நிழல்
வெயிலால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க மிக சிறந்த வழி, நிழலில் வாகனங்களை நிறுத்துவது. ஆனால், சாலை ஆக்கிரமிப்பு, விரிவாக்கம் ஆகிய காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால், பல முக்கிய நகரங்களின் சாலைகளில் மரங்களே இல்லாத நிலை காட்சியளிக்கின்றது.

எனவே, நிழலை தேடி வாகனங்களை நிறுத்துவது சற்று சாத்தியமற்றதாக நகரவாசிகளுக்கு மாறியிருக்கின்றது. இருப்பினும், சில நிமிடங்கள் செலவழித்து நிழலை தேடி வாகனங்களை நிறுத்துவது நம்முடைய பயணத்தை சிரமம் இல்லாததாக மாற்ற உதவும்.

குறிப்பு 5 : ஜன்னல்களை லேசாக திறந்து வையுங்கள்
ஜன்னல்களை லேசாக திறந்து வைப்பதன் மூலம் காரில் காற்றோட்டத்தை உறுதிப்படுத்த முடியும். இதன் வாயிலாகவும் கேபின் அதிக உஷ்னமடைவதை நம்மால் தவிர்க்க முடியும். அதேசமயம், திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டிவிடாத வண்ணம் திறந்து வைப்பது நல்லது. தற்போதைய நவீன யுகத்தில் பல யுக்திகளைக் கையாண்டு திருடர்கள் வாகனங்களைத் திருடி வருகின்றனர். இந்த செயலின்போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

குறிப்பு 6 : சோலார் மின் விசிறி
காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கருவிகள் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றே சோலார் மின் விசிறிகள். இவற்றைப் பயன்படுத்த பேட்டரி அல்லது மின்சார இணைப்புகள் தேவையில்லை. சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைப் பெற்று இயங்கும். இந்த மின்விசிறியைப் பயன்படுத்துவதன்மூலம் கேபினுக்குள் கற்றோட்டத்தை வலுப்படுத்த முடியும். இதவும் தேவையற்ற உஷ்னமான சாலையை வெளியேற்ற உதவுகின்றது.

குறிப்பு 7 : காரை எடுக்கும் முன் இதை செய்யுங்க
அனல் நிறைந்த பகுதியில் வெகு நேரமாக நின்ற காரை உடனடியாக எடுத்து புறப்படுவதைத் தவிர்த்துவிடுங்கள். சிறிது நேரம் அனைத்து கார் கதவுகளையும் திறந்து வைத்து பின்னர் புறப்படுங்கள். இதன் மூலம் காரின் கேபினுக்குள் தங்கியிருந்த சூடான சூழ்நிலையை அகற்ற முடியும்.

குறிப்பு 8 : ஏசி சர்வீஸ்
வெயில் காலம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பிப்பதால் இப்போதே வரும் கத்திரி வெயிலைச் சமாளிப்பதற்காக நாம் தயாராக வேண்டும். இதற்கு முக்கியமாக இப்போதே ஏசி நல்ல இயங்கு நிலையில் இருக்கின்றதா என்பதைக் கண்டறிய வேண்டும். சர்வீஸ் கொடுப்பது மிகச் சிறந்தது. இதன்மூலம், தேவையற்ற இன்னல்களை நம்மால் தவிர்க்க முடியும்.

மேலே கூறிய குறிப்புகளை கடைப்பிடித்தாலே காரை போதுமான அளவில் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். மேலும், தேவையற்ற பொருட்களை காருக்குள் வைத்திருப்பதை தவிர்ப்பதும் நல்லது. வெயில் காலங்களில் காரின் கேபின் அதிகளவில் உஷ்னமடையும் என்பதால் சில பொருட்கள் தேவையற்ற கசப்பான அனுபவங்களை வழங்க நேரிடும். ஆகையால், அத்தியாவசியம் அல்லாத பொருட்களை காரில் இருந்து அப்புறப்படுத்துவது நல்லது.