Just In
- 59 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹைதராபாத்தில் பிரபல நடிகரின் சொகுசு காரை தனியாக தூக்கிய போலீஸ்.. செஞ்சாங்க பாருங்க ஒரு காரியம்! தரமான சம்பவம்!
பிரபல நடிகரின் கோடி ரூபாய் மதிப்புள்ள காரை ஹைதராபாத் நகர போலீஸார் தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரின்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தைக் கீழே காணலாம்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு நிலவி வருகின்றது. முன்பு எப்போதும் இல்லாத அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் அதிக நோய் தொற்றுக்கு ஆளாகிய மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. தற்போது அதனை நீட்டித்தும் வருகின்றன.
அதேசமயம், பாதிப்புகள் குறைய தொடங்கியிருக்கும் மாநில அரசுகள் வைரஸ் பரவல் கணிசமாக குறைந்திருக்கும் பகுதிகளுக்கு லேசான தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் வரும் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையிலான நாட்களுக்கு லேசான தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும், பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்படாத நிலையே மாநிலத்தில் நிலவுகின்றது. இதேநிலைதான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் தற்போது நிலவுகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணராமல் பலர் தற்போதும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்தவகையில் சுற்றி திரிந்துக் கொண்டிருந்த பிரபல நடிகரின் காரையே தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர போலீஸார் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். அந்த காருக்கு உச்சபட்ச அபராதத்திற்கான செல்லாணையும் போலீஸார் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ஷாக்ஷி எனும் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகைச் சார்ந்த பிரபல நடிகர் நிகில் சித்தார்த்-இன் காருக்கே போலீஸார் அபராத செல்லாண் வழங்கியிருக்கின்றனர். வைரஸ் தொற்று சற்று அதிகமாக காணப்படுவதால் ஹைதராபாத் நகரம் முழுவதிலும் போலீஸார், தடுப்பு வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மற்றும் விதியை மீறி வெளியில் வருபவர்கள் மீது அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் முழு பூட்டுதல் உத்தரவை மீறி நிகில் சித்தார்த்தின் விலையுயர்ந்த ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் ஸ்போர்ட் கார் சாலையில் வலம் வந்ததாகக் கூறப்படுகின்றது.
அப்போது காரை மடக்கிய காவல்துறையினரே இரு விதமான விதிமீறல்களுக்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். காரில் பதிவெண் இல்லாதது மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறியது என இரு விதமான விதிமீறல்களுக்கான அபராத செல்லாணை அவர்கள் வழங்கியிருக்கின்றனர்.
ஆனால், எவ்வளவு ரூபாய்க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. மேலும், சம்பவத்தின்போது நடிகர் அக்காரில் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அதேவேலையில், ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்க் நடிகர் நிகில் சித்தார்த்துக்கு சொந்தமானது என்பது பற்றிய ஆதாரங்கள் மட்டும் சில கிடைத்திருக்கின்றன.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 9ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கின்றது. இதன் பின்னர் லேசான தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உச்ச நடிகரின் சொகுசு காருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது.
ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் இந்தியாவில் ரூ. 91.27 லட்சம் தொடங்கி ரூ. 2.19 கோடி வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய விலையுயர்ந்த நிகில் சித்தார்த்-இன் காருக்கே விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!