Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்தது பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தென் கொரியாவைச் சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இன்றுடன் இந்தியாவில் கால் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இந்நிறுவனம் இந்தியாவில் 9 மில்லியனுக்கும் அதிகமான யூனிட் வாகனங்களை நாட்டில் விற்பனைச் செய்திருக்கின்றது.

இப்போது இந்நிறுவனம் க்ரெட்டா, வெர்னா, வென்யூ மற்றும் கிராண்ட் ஐ20 போன்ற நவீன ரக கார்களை விற்பனைச் செய்து வந்தாலும், ஆரம்பத்தில் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றது சேன்ட்ரோ கார் மாடலே. இது அந்த காலகட்டத்தில் மாருதி சுசுகியின் 800 மாடலுக்கு கடும் போட்டியை வழங்கி வந்தது.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நாட்டின் இரண்டாம் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனம் என்ற சான்றை இக்காரே பெற்றுக் கொடுத்தது. இந்நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலேயே இயங்கி வருகின்றது. இந்த ஆலையை 1996ஆம் ஆண்டு மே 6ம் தேதி நிறுவனம் தொடங்கியது.

அப்போது சேன்ட்ரோ காரை முதன்மையான வாகனமான நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தியர்கள் இக்காருக்கு அமோகமான வரவேற்பை வழங்கியதை அடுத்து ஐ20, கெட்ஸ், அக்சென்ட் உள்ளிட்ட பிற மாடல்களையும் ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் அதன் சாம்ராஜ்யத்தை மேலும் விரிவாக்கம் செய்ய பெரும் உதவியை வழங்கியது.

இப்போது, மேற்கூறியதில் பல்வேறு மாடல்கள் வெளியேற்றப்பட்டுவிட்டன. இவற்றிற்கு நவீன மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஸ்யூவி, ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த கார்களை விற்பனைச் செய்வதற்காக சுமார் 1,154 அவுட்லெட்டுகளையும், விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்குவதற்காக 1,298 மையங்களையும் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனையாகிய ஒட்டு மொத்த வாகன விற்பனையில் 17.4 சதவீதம் ஹூண்டாய் நிறுவனத்துடையதாகும். இதேபோன்ற சிறந்த விற்பனை வளர்ச்சியை வரும்காலங்களிலும் பெற வேண்டும் என்பதற்காக நிறுவனம் புதிய தயாரிப்புகளை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தயார் செய்யப்படும் கார்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், உலகின் 88 நாடுகளுக்கு ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையிலேயே தனது 25ம் ஆண்டு இந்திய வருகை தின கொண்டாட்டத்தில் ஹூண்டாய் மூழ்கியிருக்கின்றது.